ஞாயிறு, மே 23

திருநங்கையர் வாழட்டும்





அர்த்தநாரி ஆண்டவனால்
       ஆயினரோத் திருநங்கை
உருமாரி வாழ்ந்திட
       உயிர்களுக்குத் தொல்லையோ
கரம்போக் களரோ
       கைக்கொடுக்க யாருமில்லை
பூரண வாழ்வோ
       புலரியோ ஒன்றுமில்லை


இடப்பக்க உமையவளே
       இவர்கள் சுமைகளா
முடங்கிடாது நடமாடும்
       மாமனிதம் அவர்கள்
தடங்கலை உடைத்த
       தகைசால் உயிர்கள்
பாடங்கள் கற்றிடுவர்
       பலப்படி உயர்ந்திடுவர்


இலக்கின்றிச் சென்றவர்
       இருளில் சிக்கினர்
இலட்சியம் கொண்டவர்
       இலக்கணம் ஆயினர்
இல்லத்தால் வெறுத்தோர்
       இளமையை துறந்தனர்
நில்லாதுக் கற்றவர்
       நெடும்பயணம் சென்றனர்


பெற்றோர் புறந்தள்ள
       பரிகாசம் பின்தொடர
பற்றிப் படர்ந்திட
       பலரைத் தத்தெடுத்தே
அற்புத வாழ்வை
       அளிக்கும் நூரியம்மா
வெற்றிப் பெற்றவளே
       வெஞ்சமரில் வென்றவளே


திருநங்கை வாழட்டும்
       திருநிலம் ஆளட்டும்
பெரும்சங்கை ஊதட்டும்
       பார்புகழ வாழட்டும்
உருவாகும் வாய்ப்பில்
       உழைத்து உயர்பவரை
பெருமையில் உயர்த்து
       பந்தத்தில் சேர்த்தே


2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

திருநங்கை வாழட்டும்
திருநிலம் ஆளட்டும்

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...