ஞாயிறு, மே 23
திருநங்கையர் வாழட்டும்
அர்த்தநாரி ஆண்டவனால்
ஆயினரோத் திருநங்கை
உருமாரி வாழ்ந்திட
உயிர்களுக்குத் தொல்லையோ
கரம்போக் களரோ
கைக்கொடுக்க யாருமில்லை
பூரண வாழ்வோ
புலரியோ ஒன்றுமில்லை
இடப்பக்க உமையவளே
இவர்கள் சுமைகளா
முடங்கிடாது நடமாடும்
மாமனிதம் அவர்கள்
தடங்கலை உடைத்த
தகைசால் உயிர்கள்
பாடங்கள் கற்றிடுவர்
பலப்படி உயர்ந்திடுவர்
இலக்கின்றிச் சென்றவர்
இருளில் சிக்கினர்
இலட்சியம் கொண்டவர்
இலக்கணம் ஆயினர்
இல்லத்தால் வெறுத்தோர்
இளமையை துறந்தனர்
நில்லாதுக் கற்றவர்
நெடும்பயணம் சென்றனர்
பெற்றோர் புறந்தள்ள
பரிகாசம் பின்தொடர
பற்றிப் படர்ந்திட
பலரைத் தத்தெடுத்தே
அற்புத வாழ்வை
அளிக்கும் நூரியம்மா
வெற்றிப் பெற்றவளே
வெஞ்சமரில் வென்றவளே
திருநங்கை வாழட்டும்
திருநிலம் ஆளட்டும்
பெரும்சங்கை ஊதட்டும்
பார்புகழ வாழட்டும்
உருவாகும் வாய்ப்பில்
உழைத்து உயர்பவரை
பெருமையில் உயர்த்து
பந்தத்தில் சேர்த்தே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யார் எவரோ?!
காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...
-
பன்மொழி புலமை பக்தனுக்கு உண்டா ஏழேழு உலகை இரட்சித்து காக்கும் பரமனுக்கும் உண்டா அறிந்தது அறியாதது தெரிந்தது தெரியாதது ...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
நியூட்டனின் 3வது விதிப்படி எனை ஈர்க்கும் எதிர்வினையே திக்குத் தெரியாத பரந்த வெளியில் திசைதனை காட்டுவது கன்னி உன் கண்களே காந்த ஊசிபோல் ...
-
புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி ஆம் உங்களுக்கு புரட்சி தெரியும் வச்சாத்தியும் மகாமக குளமும் பரமக்குடியும் நேற்றின்றைய புரட்சிகள் லிபியாவ...
-
கண் கலந்து காதலில் விழுந்து கரம் பிடித்தேன் ஒன்னு கலந்து ஒரு பிள்ளையும் பெத்து ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன் வார்த்தெடுத்த வார்த்தைகளின...
2 கருத்துகள்:
அருமை...
அருமை
திருநங்கை வாழட்டும்
திருநிலம் ஆளட்டும்
கருத்துரையிடுக