ஞாயிறு, மே 23
திருநங்கையர் வாழட்டும்
அர்த்தநாரி ஆண்டவனால்
ஆயினரோத் திருநங்கை
உருமாரி வாழ்ந்திட
உயிர்களுக்குத் தொல்லையோ
கரம்போக் களரோ
கைக்கொடுக்க யாருமில்லை
பூரண வாழ்வோ
புலரியோ ஒன்றுமில்லை
இடப்பக்க உமையவளே
இவர்கள் சுமைகளா
முடங்கிடாது நடமாடும்
மாமனிதம் அவர்கள்
தடங்கலை உடைத்த
தகைசால் உயிர்கள்
பாடங்கள் கற்றிடுவர்
பலப்படி உயர்ந்திடுவர்
இலக்கின்றிச் சென்றவர்
இருளில் சிக்கினர்
இலட்சியம் கொண்டவர்
இலக்கணம் ஆயினர்
இல்லத்தால் வெறுத்தோர்
இளமையை துறந்தனர்
நில்லாதுக் கற்றவர்
நெடும்பயணம் சென்றனர்
பெற்றோர் புறந்தள்ள
பரிகாசம் பின்தொடர
பற்றிப் படர்ந்திட
பலரைத் தத்தெடுத்தே
அற்புத வாழ்வை
அளிக்கும் நூரியம்மா
வெற்றிப் பெற்றவளே
வெஞ்சமரில் வென்றவளே
திருநங்கை வாழட்டும்
திருநிலம் ஆளட்டும்
பெரும்சங்கை ஊதட்டும்
பார்புகழ வாழட்டும்
உருவாகும் வாய்ப்பில்
உழைத்து உயர்பவரை
பெருமையில் உயர்த்து
பந்தத்தில் சேர்த்தே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
திரளழகு
திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...
-
அதிர்வில்லா முத்தத்தில் ஆனந்தம் ஏதடி எதிர்பாரா வேளையில் எத்தனைச் சுகமடி உதிரம் கொதிக்க உதடுகள் துடிக்க கதிகலங்கும் முத்தத்தை கண்ணே வழங்கட...
-
வேண்டாம் என்பது வேதவாக் கல்ல வேள்வியைத் தொடர வேண்டுகோள் என்றே மோகன இராகத்தில் மௌனமாய் சுரங்களை ஆனந்த பைரவியாக்கி ஆவலைத் தூண்டினேன் ஏகாந்த வ...
-
சிக்கந்தர் தர்கா தூணில் சிவனின் மகனுக்குத் தீபம் சி.ஐ.எஸ்.எப் சகிதம் சீக்கரம் கிளம்புங்கள் சுவாமி உளரல்கள் சட்டமாக ஊர் வேடிக்கை பார...
-
நண்பரொருவர் தான் எழுதியதை என் தளத்தில் பதியுமாறு வேண்டினார் அவரின் அவா இதோ........ படைத்தவனையே சாதியால் பிரித்து வைத்தார் ஆன்மீக அறிவின்ற...
-
ஓட்டுப் போட்டு ஆவதென்ன ஒட்டுறவு இந்நாட்டில் என்பதுவோ நாட்டில் தேர்தல் நடப்பது நயவஞ்சக அரசியலின் நாடகமோ காட்டாட்சிக் கட்சிகளின் கரங்களை...
2 கருத்துகள்:
அருமை...
அருமை
திருநங்கை வாழட்டும்
திருநிலம் ஆளட்டும்
கருத்துரையிடுக