ஞாயிறு, மே 23
திருநங்கையர் வாழட்டும்
அர்த்தநாரி ஆண்டவனால்
ஆயினரோத் திருநங்கை
உருமாரி வாழ்ந்திட
உயிர்களுக்குத் தொல்லையோ
கரம்போக் களரோ
கைக்கொடுக்க யாருமில்லை
பூரண வாழ்வோ
புலரியோ ஒன்றுமில்லை
இடப்பக்க உமையவளே
இவர்கள் சுமைகளா
முடங்கிடாது நடமாடும்
மாமனிதம் அவர்கள்
தடங்கலை உடைத்த
தகைசால் உயிர்கள்
பாடங்கள் கற்றிடுவர்
பலப்படி உயர்ந்திடுவர்
இலக்கின்றிச் சென்றவர்
இருளில் சிக்கினர்
இலட்சியம் கொண்டவர்
இலக்கணம் ஆயினர்
இல்லத்தால் வெறுத்தோர்
இளமையை துறந்தனர்
நில்லாதுக் கற்றவர்
நெடும்பயணம் சென்றனர்
பெற்றோர் புறந்தள்ள
பரிகாசம் பின்தொடர
பற்றிப் படர்ந்திட
பலரைத் தத்தெடுத்தே
அற்புத வாழ்வை
அளிக்கும் நூரியம்மா
வெற்றிப் பெற்றவளே
வெஞ்சமரில் வென்றவளே
திருநங்கை வாழட்டும்
திருநிலம் ஆளட்டும்
பெரும்சங்கை ஊதட்டும்
பார்புகழ வாழட்டும்
உருவாகும் வாய்ப்பில்
உழைத்து உயர்பவரை
பெருமையில் உயர்த்து
பந்தத்தில் சேர்த்தே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இன்று போய் நாளை வா
பொருளாதார தடைகளினால் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்கள் போரில் பொருத முடியாதென்றா எப்ஸ்டின் கோப்புகளுக்காக இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு என்னைத்...
-
நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர் அம்பானி, அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதை முன்னிட்டு Reliance Industries Limited எனும் நிறுவனத்தின் மீத...
-
ஓட்டு யாருக்கு மில்லையென ஒவ்வொருவரும் சொன்னால் ஒரு மாற்றம் வருமா! உலகம் விழிப்புறுமா? ஓட்டுரிமை உனது ஜனநாயக கடமையெனில் ...
-
கள்ளுண்ணும் கண்ணாலே கட்டுறுதிக் காளையை துள்ளிட வைத்தவளே தூக்கம் கெடுத்தவளே வெள்ளி முளைக்கயில் வேட்கையைச் சொன்னேனே அள்ளியள்ளிக் கொடுத்தால் ...
-
தேனாறும் பாலாறும் தேர்தல் வந்தா ஓடுமா ஏனோ தானோ என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா தானமா தந்ததற்கு தருவது உனதுபொன் ஓட்டா மான மில்லா மாறும் கட்சி...
-
எந்த சூழ்நிலையிலும் என்னிணை நீயென்று என்றென்றும் சொல்வேனடி உனக்காக உன்னுடனேயே ஒவ்வொரு பொழுதும் கழியுமடி ஆயினும் ஆயிரம் அவஸ்தைகள் அத்தனையும்...
2 கருத்துகள்:
அருமை...
அருமை
திருநங்கை வாழட்டும்
திருநிலம் ஆளட்டும்
கருத்துரையிடுக