ஞாயிறு, பிப்ரவரி 23
முத்தத்தில் முழ்கடிடா
மோகத்தில் திளைப்போமடா
மெய்மறந்து கற்போமடா
ஏகாந்த வேளையில்
ஏழிசைதனை இசைத்திடடா
தாகத்தினைத் தணித்திட
தண்ணிலவா குளிர்ந்திட
யாகத்தினை நடத்திடு
யௌவனம் விழிக்குமடா
சொற்சுவை தன்னில்
சொக்கிட வைத்தவனே
பொற்புடை அரிவையை
போற்றத் தெரியாதோ
காற்றின் மொழிதனில்
காதலை அறியலையோ
பாற்கடல் அமுதத்தை
பரிமாற விரும்பலையோ
சித்தத்தில் நிறைந்தவளை
சிணுங்க வைக்காதே
புத்தனாகிப் புலனொடுக்கிப்
பூவையை வருத்தாதே
பித்தம் தெளிவதற்குள்
பிரபஞ்சம் முடிவதற்குள்
மொத்தத்தில் கைப்பற்றி
முத்தத்தில் முழ்கடிடா
அ. வேல்முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
H₂O என்றால்...?
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
கல்பனாக் கதையென்று காமகோடிக் கதைகட்டியப் பிறகு கடைகோடிச் சூத்திரன் நான் கதைச் சொன்னாக் கேட்பேளா கோபாலக் கிருஷ்ண பாரதியின் கோணல் வரிகளால் திர...
-
திரேதா யுகத்தில் இராமன் இராவணனை வென்ற பின் சிவனை வழிப்பட்ட இடம் இராமேஸ்வரம், அவதாரங்கள் பல எடுத்த விஷ்ணு கலியுகத்தில் சிவனை காண மீண்டும்...
-
ஆரணியில் ஆரம்பித்தது அரகரனின் அச்சு முறி விளையாட்டு ஆட்டத்தில் அரங்கனும் அங்கம் வகிக்க அடுத்து சூடு பிடித்தது அரகரனும் அரங்...
-
வேணுகோபலனுக்கும் இராகவேந்திரனுக்கும் பன்றிக் கறிப் படைத்திட பதைபதைத்தது கோவை கண்ணப்பன் நாயனாரானார் ஹரி என்கிற ராம் பிரகாஷ் நாயனாராவதை இந்துக...
-
கிரேக்கத்தின் பேரழகியாய் இங்கிலாந்து ராணியாய் என்தேவி நீயாகிட சீனப்பட்டு வாங்கினேன் சித்திரமாய் சிங்காரமாய் தெரிய ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக