இழப்பின் பொழுது இன்னலைக் களைந்து
பழகும் மானிடன் பகலவன் ஆவான்
குழப்பம் இருப்பின் குந்தகம் தவிர்த்து
வழக்கைத் தீர்த்து வாட்டம் போக்கி
அளாவி மகிழும் அன்பர் யாரோ
வளர்ப்பர் நட்பை வாழ்நாள் முழுதுமே
அ. வேல்முருகன்
பொருளாதார தடைகளினால் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்கள் போரில் பொருத முடியாதென்றா எப்ஸ்டின் கோப்புகளுக்காக இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு என்னைத்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக