ஞாயிறு, மார்ச் 1
நிபந்தனையற்றதா காதல்
எந்த சூழ்நிலையிலும்
என்னிணை நீயென்று
என்றென்றும் சொல்வேனடி
உனக்காக
உன்னுடனேயே
ஒவ்வொரு பொழுதும் கழியுமடி
ஆயினும்
ஆயிரம் அவஸ்தைகள்
அத்தனையும் சந்திக்க
அடியே
அன்பன் துணையுண்டு
சோதனைகளை சோதிக்க
வா, இறுகப் பற்று
இருவரும் இணைந்து
எதையும் எதிர்கொள்வோம்
கோப தாபத்தில்
கொதித்தெழுந்தாலும்
குறைகளைச் சுட்டு
விட்டு விலகாது
விதியென நோகாது
வேறெங்கு செல்வேனடி
பூரணத்துவம் கொண்டவர்
பூவுலகில் யாருமில்லை
புன்னகையோடிரு
கடினமாக காலங்களில்
கரைந்து குழம்பாதே
பொறுமையோடிரு
காதல்
காலகாலமானது
கண் கலங்காதிரு
மகிழ்வானத் தருணங்களில்
மனமொத்து இருப்பது
இயல்பென்றாலும்
நீயிருக்கும் வரை
நிலைத்திருக்கும் எனதன்பு
நிபந்தனைகளுக்கு உட்டபட்டதல்ல
அன்பன்
அ. வேல்முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
H₂O என்றால்...?
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
திரேதா யுகத்தில் இராமன் இராவணனை வென்ற பின் சிவனை வழிப்பட்ட இடம் இராமேஸ்வரம், அவதாரங்கள் பல எடுத்த விஷ்ணு கலியுகத்தில் சிவனை காண மீண்டும்...
-
கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...
-
புராணமோ புனைந்தக் கதையோ பொய்களின் மூட்டையோ பொறுமையாய் கேளுங்கள் வராக அவதாரத்தில் பூமாத் தேவியை தொட்டதால் பவுமன் பிறக்கிறான் அரக்கர்களை வென்ற...
-
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 2800 நிறுவனங்கள் காணவில்லை. ஆயினும் புதியதாக 786 நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பட்டி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக