ஞாயிறு, மார்ச் 1
நிபந்தனையற்றதா காதல்
எந்த சூழ்நிலையிலும்
என்னிணை நீயென்று
என்றென்றும் சொல்வேனடி
உனக்காக
உன்னுடனேயே
ஒவ்வொரு பொழுதும் கழியுமடி
ஆயினும்
ஆயிரம் அவஸ்தைகள்
அத்தனையும் சந்திக்க
அடியே
அன்பன் துணையுண்டு
சோதனைகளை சோதிக்க
வா, இறுகப் பற்று
இருவரும் இணைந்து
எதையும் எதிர்கொள்வோம்
கோப தாபத்தில்
கொதித்தெழுந்தாலும்
குறைகளைச் சுட்டு
விட்டு விலகாது
விதியென நோகாது
வேறெங்கு செல்வேனடி
பூரணத்துவம் கொண்டவர்
பூவுலகில் யாருமில்லை
புன்னகையோடிரு
கடினமாக காலங்களில்
கரைந்து குழம்பாதே
பொறுமையோடிரு
காதல்
காலகாலமானது
கண் கலங்காதிரு
மகிழ்வானத் தருணங்களில்
மனமொத்து இருப்பது
இயல்பென்றாலும்
நீயிருக்கும் வரை
நிலைத்திருக்கும் எனதன்பு
நிபந்தனைகளுக்கு உட்டபட்டதல்ல
அன்பன்
அ. வேல்முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
போடுங்கம்மா ஓட்டு
ஜனநாயகத் திருவிழா ஜனநாயகன் திரைப்படம் சதிகளால் வரவில்லை என சந்துக்கு சந்து பேசிக் கொள்கிறார்கள் வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத கட்சிகள்...
-
அமெரிக்காவின் paypal நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் ஆண்டு விழா போட்டிகளின் ஒரு பகுதியாக பணியாளர்களை இப்பட...
-
காதலன் என்னிடம் கொண்டாயோ கரிசனம் ஆதலின் எமக்கு அளித்தாயோ தரிசனம் பார்வை தீண்டிட பெற்றேன் விமோசனம் தீர்வை கண்டிட தாராயோ அரியாசனம்
-
ஆவணங்களின் அடிப்படையில் எழுதப் பட்டதாக இதன் ஆசிரியர்கள் சொல்கின்றனர். இதில் சொல்லப்படுகிற நிகழ்வுகள் மற்றும் ஆசிரியர்களின் கருத்துக்கள...
-
அறியாததை அறியவும் ஆதியைத் தேடி ஓடவும் அறிந்ததை அகிலத்தில் ஆலம் விழுதாய்ப் பரப்பவும் அறம்தனை வகுத்து ஆறறிவு உயிராய் உயரவும...
-
ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் "ஃபிடில்" வாசித்தது வரலாறு ஈரானோடு இஸ்ரேலும் பற்றி எரிய அமெரிக்க அதிபரால் இரத்த ஆறு ஓட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக