வியாழன், மார்ச் 5

யாமத்தின் யாழிசை

 














கள்ளுண்ணும் கண்ணாலே
கட்டுறுதிக் காளையை
துள்ளிட வைத்தவளே
தூக்கம் கெடுத்தவளே
வெள்ளி முளைக்கயில்
வேட்கையைச் சொன்னேனே
அள்ளியள்ளிக் கொடுத்தால்
அத்தானும் மகிழ்வேனே

ஞாயிறு உதித்தாலும்
ஞாபகங்கள் நிழலாடுதே
பாயில் உறங்கிட
பலகனவு வருகுதே
வாயிலில் நின்றே
வருகையை நோக்குதே
நோயில் மீட்டிட
நொடியும் தாமதிக்காதே

தாமரையிலைத் தண்ணீரா
தவிக்க விடாதே
சாமக்கோழி கூவுமென
சாத்திரம் பார்க்காதே
கோமளத்தின் கோபத்தில்
கோமாளி யாகாதே
காமன் கணைகளில்
கணக்குப் பார்க்காதே

யாமத்தின் யாழிசை
யாகப்பத்தினி யானே
பூமான் பூவையின்
பூப்பட்டு மேனியின்
ஏமாந்த கொங்கையை
ஏந்திப் பிடித்து
காமத்தின் கதவுகளை
கைப்பற்றத் தாமதமேன்


அ. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

கொலைபழி சுமத்து

ரோம் நகரம் பற்றி எரிகையில் நீரோ மன்னன் "ஃபிடில்" வாசித்தது வரலாறு ஈரானோடு இஸ்ரேலும் பற்றி எரிய அமெரிக்க அதிபரால் இரத்த ஆறு ஓட...