சனி, மார்ச் 14

இன்று போய் நாளை வா









பொருளாதார தடைகளினால்
ஏற்கனவே
என்னால் கொல்லப்பட்டவர்கள்
போரில் பொருத முடியாதென்றா

எப்ஸ்டின் கோப்புகளுக்காக
இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு
என்னைத் தாக்குவதோ
எண்ணெய் வளங்களை கொள்ளையிடவோ

ஏவுகணைகளோடு
ஏராளாமான பொய்களோடு
ஒருமுறையல்ல எத்தனைமுறை
பிரம்மாஸ்திரத்தை ஏவினாலும்

இறையாண்மை கொண்ட
எந்நாடும் எதிர்க்கும்
இல்லாத நாடுகள்
அமெரிக்காவை நத்திப் பிழைக்கும்

பலவீனமான நேரத்தில்
பழித் தீர்க்காது
பலம்பெற்று வா என்பது
பாழும் கிணற்றில் வீழ்வதல்லவா

ஆக, அயோத்தி இராமன்
நிராயுதபாணி இராவணனை
பார்த்துரைத்த
கட்டுக்கதையல்ல இந்தப் போர்


அ. வேல்முருகன்




கருத்துகள் இல்லை:

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...