ஏற்கனவே
என்னால் கொல்லப்பட்டவர்கள்
போரில் பொருத முடியாதென்றா
எப்ஸ்டின் கோப்புகளுக்காக
இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு
என்னைத் தாக்குவதோ
எண்ணெய் வளங்களை கொள்ளையிடவோ
ஏவுகணைகளோடு
ஏராளாமான பொய்களோடு
ஒருமுறையல்ல எத்தனைமுறை
பிரம்மாஸ்திரத்தை ஏவினாலும்
இறையாண்மை கொண்ட
எந்நாடும் எதிர்க்கும்
இல்லாத நாடுகள்
அமெரிக்காவை நத்திப் பிழைக்கும்
பலவீனமான நேரத்தில்
பழித் தீர்க்காது
பலம்பெற்று வா என்பது
பாழும் கிணற்றில் வீழ்வதல்லவா
ஆக, அயோத்தி இராமன்
நிராயுதபாணி இராவணனை
பார்த்துரைத்த
கட்டுக்கதையல்ல இந்தப் போர்
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக