சனி, ஜனவரி 31

விரும்பிய வாழ்வு

 














எனக்கேற்ற இணையென்று
ஏறிட்டுப் பார்தேனன்று
தினகரன் நானென்று
தீட்சை அளித்துவிட்டு
வனப்பில்லை யென்றே
வனவாசம் அளித்திட
மௌனமே மருந்தென
மாவுலகில் வாழ்கிறேன்

ஊடலென ஊரெல்லாம்
ஊகிக்காது அறிந்தாலும்
காடெல்லாம் வாசமுண்டு
காத்திருப்போம் என்றிருந்தேன்
நாடகமென நானறிய
நாதியற்ற மன்னனாய்
வேடங்களில் இழந்தது
வேங்கிநாடு மல்லவே

அணங்கென ஆசையோ
அவசியமென கருதியோ
இணங்கிச் சென்றேனோ
இடறிதான் வீழ்ந்தேனோ
கணக்கு வழக்கென்று
காதலில் வந்தபின்
பிணக்கு என்பதும்
பிறைபோல தானே

எண்ண ஓட்டங்கள்
ஏனோ ஒத்திருக்கல
உண்ணோக்கம் எதுவென
உள்ளபடி விளங்கல
எண்ணீர் தெளித்து
எழுப்பிய கல்லறையில்
விண்ணப்ப மெழுதாதே
விரும்பியபடி வாழடி

அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...