வெள்ளி, மே 25

கோல்கேட்டும் கடவுளும்

ஆலங்குச்சி
வேப்பங்குச்சி- அடுப்பு
உமிச் சாம்பல்
காலங் காலமாய்
காத்து வந்தது

மூலிகை
உப்பு
"ஜெல்"
"மின்ட்"
"டோட்டல்"
"சென்சிடிவ்" என்றும்

அம்பிகை
அய்யனார்
அல்லா
இராமன்
ஈஸ்வரன்
யேசு
இப்படியும்

நம்பிக்கைக்கு
தகுந்தவாறு
நயமான
விலையில்
வெளியீடுகள்

கோல்கேட்
வெளியிடுபவன்
முதலாளி

கடவுளை
வெளியிடுபவன்
யார்?

தெரியாதென்றால்
மதுரையின்
இளைய ஆதினத்தை
கேட்போம்

1 கருத்து:

தருமி சொன்னது…

//கோல்கேட்
வெளியிடுபவன்
முதலாளி

கடவுளை
வெளியிடுபவன்
யார்?//

பிரமாண்ட பெரிய முதலாளி!!

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...