புதன், ஆகஸ்ட் 6

“மிஸ்டு கால்”


நீயோ நானோ
நினைவுகளில் வாழ்பவர்கள் – ஆம்
நினைக்காத நாளில்லை

மறவா
மறந்தாய் – எனவெழுதும்
மடலல்ல இது

உறவா
உருகிடுவேன்
உனதருகாமையில்

சிறகோ – இச்
சிறியவளுக்கில்லை
சிந்தனை மட்டுமே

நாளும்
அழைப்பாய் – பல
கதை கதைப்பாய்

அழைக்க மறந்தாயென
அறிவிப்பில்லை – இதுவென்
அகமகிழ்ச்சிக்கொரு கோரிக்கை

உழைப்பின் வேகத்தில்
உன்னையே மறப்பவன் நீ
ஒருநொடி எனை நினைத்திட

கைப்பேசியில்
எனக்கான அழைப்பை
தவற விடு

வாய்பேசிட நினைத்ததை
கைபேசியின் பாடல்
காற்றாய் ஒலித்திடும்

காலமும் கனவும்
கரைந்திடும்
உன் நினைவில்




2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை நண்பரே

பாலா சொன்னது…

புலவரே மிகவும் அருமை

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...