வியாழன், மார்ச் 1

நீதி மய்யம்


அரிதார மய்யம்
அரசியல் மய்யமாகுமோ
பரிதாபக் கூட்டம்
பகல்கனவுக் காணுது

கருப்பும் சிவப்பும்
கலந்துச் செய்த
கலவைத் தானென
கட்டியம் கூறுகின்றான்

காவி அபாயமென்றால்
ஊழல் ஒழிப்பென்னென்கிறான்
எங்ஙனம் என்றால்
ஏதோதோக் கூறுகின்றான்

சம்பளம் பாக்கிக்காரன்
சினிமாவில் சம்பாதித்தானாம்
அரசியலில் சம்பாதிக்க
அவசியமில்லையாம்

ஊதிப் பெருக்கி
உத்தம வில்லனை
உங்கள் மனங்களில்
உரமிட்டாகி விட்டாச்சு

திங்கள் கழித்து
தீர்ப்பும் எழுதுவீர்கள்
தப்பித் தவறி
சிம்மாசனத்தில் அமர்ந்தாலும்

ஏ...... சமூகமே
ஏமாந்தது நீயாகதானிருப்பாய்
எதுவும் மாறாது
எடுப்பான முகம்தவிர

சின்னாள் கழிந்து
சித்ரகுப்தக் கணக்கில்
சிகரத்தில் என்பாய்
சீட்டுக் கட்டு விழும்போது

விஞ்ஞான ஊழல்லென்று
வியாக்கியானம் சொல்வாய் - ஆக
வேறுமுகம் தேடாதே
வேறுவழித் தேடு......

1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வேறுமுகம் தேடாதே
வேறுவழி தேடு......

அருமை
உண்மை

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...