சனி, மார்ச் 27

சிந்தை கவர்....

 




பிடியிடையும் பின்னலும்
     பின்னழகைச் சொல்லிட
நாடியின் ஓட்டத்தை
     நாயகி நிறுத்திட
தோடிக்கு ஆடிடும்
     தோகையின் அழகை
கோடிக் கவியிங்கு
      கோட்பாடின் றிபாடிட


சுயம்வரத் தேடலுக்கு
     சுந்தரி நின்றாளோ
பாயிரம் பாடிட
    பலகவி வந்தாரோ
ஆயிரம் ஆசைகள்
    அவனவன் மணாளனாக
ஆயினும் ஆயிழை
    அடியேனை நாடுவாள்

ஆணவத்தின் அடிச்சுவடு

    ஆணவத்தின் அடிச்சுவடு அச்சனாதன சாதியடுக்கே ஊனமாக்கிய உன்மனதை உலுக்கலியே கொலைகளும் நாணமின்றி மனிதனென நாட்டில் சொல்லாதே வீணானச் சாதிய...