சனி, மார்ச் 27

சிந்தை கவர்....

 




பிடியிடையும் பின்னலும்
     பின்னழகைச் சொல்லிட
நாடியின் ஓட்டத்தை
     நாயகி நிறுத்திட
தோடிக்கு ஆடிடும்
     தோகையின் அழகை
கோடிக் கவியிங்கு
      கோட்பாடின் றிபாடிட


சுயம்வரத் தேடலுக்கு
     சுந்தரி நின்றாளோ
பாயிரம் பாடிட
    பலகவி வந்தாரோ
ஆயிரம் ஆசைகள்
    அவனவன் மணாளனாக
ஆயினும் ஆயிழை
    அடியேனை நாடுவாள்

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...