சனி, மார்ச் 27

சிந்தை கவர்....

 




பிடியிடையும் பின்னலும்
     பின்னழகைச் சொல்லிட
நாடியின் ஓட்டத்தை
     நாயகி நிறுத்திட
தோடிக்கு ஆடிடும்
     தோகையின் அழகை
கோடிக் கவியிங்கு
      கோட்பாடின் றிபாடிட


சுயம்வரத் தேடலுக்கு
     சுந்தரி நின்றாளோ
பாயிரம் பாடிட
    பலகவி வந்தாரோ
ஆயிரம் ஆசைகள்
    அவனவன் மணாளனாக
ஆயினும் ஆயிழை
    அடியேனை நாடுவாள்

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...