செவ்வாய், மே 25

பொற்காலம்

 

 

குப்தர் சோழர் காலமும்

    குடிகளின் வாழ்வின் முறையும்

ஒப்புவமை இல்லாக் காரணத்தால்

    ஒப்பினர் பெற்காலம் என்றே

அப்பத்தைப் பிட்டு அளித்து

    அன்பைப் போதித் திருந்தாலும்

சப்பாத்தி முள்ளைக் கீரிடமாய்

    சூட்டியதால் புனிதக் காலமானது

 

காமராசர் ஆட்சிப் பொற்காலம்

    கழக ஆட்சி நிகழ்காலம்

கோமளவல் லியாட்சிக் கடந்தகாலம்

    “கார்பரேட்” ஆட்சி இருண்டகாலம்

ஏமாளி மக்கள் எண்ணுவது

     என்று மீளும் பொற்காலம்

சீமான் சீமாட்டி ஆண்டாலும்

    சந்திப்பது என்னவோ கற்காலம்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கற்காலமே சிறந்தது
என்றாகி விடும் போல...

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...