வியாழன், ஜூன் 10

ஒன்றியத்தில் தமிழ்நாடு







அகம்பலக் கொண்ட
....அருமை நாடு
சகலரும் ஒன்றே
.....சட்டம் பாரு
சிகரமாய் வென்ற
....சிங்காரத் தமிழுக்கு
அகரமாய்த் தமிழ்நாடு
....ஆகட்டும் வளநாடு


ஒன்றியம் என்றால்
....உனக்கேன் கவலை
அன்றிலாய் வாழ
....அடித்தளம் அதுவே
அன்றியும் அழைக்க
..... அடிமையா தமிழன்
குன்றிடா ஒன்றியத்தில்
....கூடிடு தமிழனென்றே

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பெரிய ஒரு அழிவிற்கு ஒரு முன்னோட்டம்...

ஆணவத்தின் அடிச்சுவடு

    ஆணவத்தின் அடிச்சுவடு அச்சனாதன சாதியடுக்கே ஊனமாக்கிய உன்மனதை உலுக்கலியே கொலைகளும் நாணமின்றி மனிதனென நாட்டில் சொல்லாதே வீணானச் சாதிய...