செவ்வாய், அக்டோபர் 17
காமம்
கடக்க முடியாததா
கரையற்ற பால்வெளியா
அடக்க முடியாததா
ஆசையின் அளவற்றதா
தொடங்கிடத் தொடருமோ
தொடராதெனில் மாளுமோ
முடக்குமோ முனிவனையும்
முதுமொழி கற்றோரையும்
விருந்தாய் கொண்டால்
விளையும் அன்பு
விருந்தே கதியெனில்
விளையும் துன்பம்
விருந்தெனும் நினைப்பே
விரக்தியில் தள்ளுது
மருந்தென நினைத்தாலும்
மனதைக் குழப்புது
இக்கணமே வேண்டும்
இல்லையேல் என்போரே
சிக்கலில் சிக்குவர்
சிற்றின்ப பாதையில்
சொக்கும் காமம்
சுகமான விருந்தென்று
பக்குவ மடைந்தோர்
பட்டறிவில் தெளிவர்
நினைக்கும் மனதை
நிறுத்திப் பாரு
அனைத்தும் விளங்க
அறிவைக் கேளு
புனைந்த இன்பதுன்பம்
புத்தி உரைப்பதே
எனவே காமம்
இழிவல்ல இனிதுமல்ல
விருந்தின் விளைவோ
விரைவில் முடிவுறும்
அருந்திய சுகங்கள்
அன்றோடு மறையும்
கருத்தாய் உரைப்பேன்
காமம் கட்டுப்பட்டதே
இருப்பினும் மறுப்பேன்
இடறிய சிலருக்கே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இன்று போய் நாளை வா
பொருளாதார தடைகளினால் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்கள் போரில் பொருத முடியாதென்றா எப்ஸ்டின் கோப்புகளுக்காக இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு என்னைத்...
-
நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர் அம்பானி, அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதை முன்னிட்டு Reliance Industries Limited எனும் நிறுவனத்தின் மீத...
-
ஓட்டு யாருக்கு மில்லையென ஒவ்வொருவரும் சொன்னால் ஒரு மாற்றம் வருமா! உலகம் விழிப்புறுமா? ஓட்டுரிமை உனது ஜனநாயக கடமையெனில் ...
-
கள்ளுண்ணும் கண்ணாலே கட்டுறுதிக் காளையை துள்ளிட வைத்தவளே தூக்கம் கெடுத்தவளே வெள்ளி முளைக்கயில் வேட்கையைச் சொன்னேனே அள்ளியள்ளிக் கொடுத்தால் ...
-
தேனாறும் பாலாறும் தேர்தல் வந்தா ஓடுமா ஏனோ தானோ என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா தானமா தந்ததற்கு தருவது உனதுபொன் ஓட்டா மான மில்லா மாறும் கட்சி...
-
எந்த சூழ்நிலையிலும் என்னிணை நீயென்று என்றென்றும் சொல்வேனடி உனக்காக உன்னுடனேயே ஒவ்வொரு பொழுதும் கழியுமடி ஆயினும் ஆயிரம் அவஸ்தைகள் அத்தனையும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக