ஏற்றத் தாழ்வில்லா
ஏட்டுக் கல்வி
எண்பதாண்டு கடந்தாலும்
எட்டாக் கனியா
கற்றலின் கடவுளும்
நீட்டைத் தடுக்காதோ
ஐஐஎம், ஐஐடி
அயலாகி வாராதோ
விருப்பமுள்ளக் கல்வியில்
விண்ணைத் தொடலாம்
ஒருங்கிணைந்தக் கல்வியில்
உலகை அறியலாம்
பருந்தாப் பறக்கையில்
பலதும் காணலாம்
பொருந்தாக் கல்வியில்
புலராது மானுடமே
ஆரியமோ திராவிடமோ
அடிப்படைக் கல்விக்கு
போரிட்டு போனவுயிர்
போகட்டும் என்பீரோ
கோரிக்கை வைப்பதா
குடிகளின் உரிமை
பேரிகையை முழக்கு
பேதமற்ற கல்விக்கு
செவ்வாய், நவம்பர் 12
ஏற்றத் தாழ்வில்லா ஏட்டுக் கல்வி
சனி, நவம்பர் 9
அத்தானின் ஆசை
அடியே உனைபார்க்க
ஆரத் தழுவது மனது
வடிவ ழகுதானே
வச்ச கண்மூட மறக்குது
துடிக்கும் நெஞ்சமது
தூதுச் சொல்லி வைக்குது
முடியுமா முத்த மொன்று
மூச்சு முட்டிப்போகுது
அத்தானின் ஆசைக்கென்ன
அளவில்லா வெள்ளம் போல
முத்தத்தின் தேவையென்ன
முக்கனிச் சுவையைத் தேடவா
மொத்தத்தில் வித்தைகள்
மோன நிலையில் அறியவா
நித்தமும் நீயெனை
நீங்காது காப்பாயா வேலவா
கற்ற லென்பது அனுவபம்
கண்மணி ஒத்துழைக்க குதுகலம்
பற்றிப் படரட்டு மின்பம்
பயிற்சிகள் பெற்றிடும் காலம்
அற்றைத் தினத்தின் அழகை
அன்றே ரசித்து மகிழ்வோம்
அற்புதம் இதுவென அன்பே
ஆயுள் முழுக்க வாழ்வோம்
ஆரத் தழுவது மனது
வடிவ ழகுதானே
வச்ச கண்மூட மறக்குது
துடிக்கும் நெஞ்சமது
தூதுச் சொல்லி வைக்குது
முடியுமா முத்த மொன்று
மூச்சு முட்டிப்போகுது
அத்தானின் ஆசைக்கென்ன
அளவில்லா வெள்ளம் போல
முத்தத்தின் தேவையென்ன
முக்கனிச் சுவையைத் தேடவா
மொத்தத்தில் வித்தைகள்
மோன நிலையில் அறியவா
நித்தமும் நீயெனை
நீங்காது காப்பாயா வேலவா
கற்ற லென்பது அனுவபம்
கண்மணி ஒத்துழைக்க குதுகலம்
பற்றிப் படரட்டு மின்பம்
பயிற்சிகள் பெற்றிடும் காலம்
அற்றைத் தினத்தின் அழகை
அன்றே ரசித்து மகிழ்வோம்
அற்புதம் இதுவென அன்பே
ஆயுள் முழுக்க வாழ்வோம்
செவ்வாய், நவம்பர் 5
தெவிட்டாத இன்பம்
குறள் 1328:
ஊடிப்
பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
ஊடிய பிறகு
கூடியதால்நாடி நரம்பெல்லாம்
ஆடி அதிர
வடிந்த நெற்றி வேர்வையில்
தேடினாலும் கிடைக்காத
தெவிட்டாத இன்பம்
மீண்டும்
ஊடிக் கொள்ள
விளைந்திடுமோ?!!
சனி, நவம்பர் 2
நிலையானது?!!!
பணம் புகழுக்கு
பகீரத பிரயத்தனம்
பலகாலம் நிலைத்திருக்குமோ?
ஆண்டாண்டு கால
அதிகாரம் அப்படியே
அடுத்த தலைமுறை தொடரவா?
இழப்பதற்கு துணிவில்லை
இறப்பதற்கு எண்ணமில்லை
எனினும் நடப்பதென்னவோ
ஆர்டிக் உருகுது
ஆங்கொரு புல்லினம் மடியுது
ஆலமரமும் அடியோடு சாயுது
நிரந்தரத்தைத் தேடுவதும்
நினைத்ததை தக்க வைப்பதும்
தேக்கமடைய வைக்கிறது….
வாழ்க்கை
வற்றாத நதி போல
வழிகளை உருவாக்கி ஓடட்டும்
மேடு பள்ளங்கள்
காடுகள் மலைகள்
கலங்கி நிற்பதில்லை
வாழ்வும் அப்படிதான்
சாசுவதத்தை தேடாது
சஞ்சரிக்க பழகுங்கள்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
இன்று போய் நாளை வா
பொருளாதார தடைகளினால் ஏற்கனவே என்னால் கொல்லப்பட்டவர்கள் போரில் பொருத முடியாதென்றா எப்ஸ்டின் கோப்புகளுக்காக இஸ்ரேலுடன் சேர்ந்து கொண்டு என்னைத்...
-
நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர் அம்பானி, அரசுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதை முன்னிட்டு Reliance Industries Limited எனும் நிறுவனத்தின் மீத...
-
ஓட்டு யாருக்கு மில்லையென ஒவ்வொருவரும் சொன்னால் ஒரு மாற்றம் வருமா! உலகம் விழிப்புறுமா? ஓட்டுரிமை உனது ஜனநாயக கடமையெனில் ...
-
கள்ளுண்ணும் கண்ணாலே கட்டுறுதிக் காளையை துள்ளிட வைத்தவளே தூக்கம் கெடுத்தவளே வெள்ளி முளைக்கயில் வேட்கையைச் சொன்னேனே அள்ளியள்ளிக் கொடுத்தால் ...
-
தேனாறும் பாலாறும் தேர்தல் வந்தா ஓடுமா ஏனோ தானோ என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா தானமா தந்ததற்கு தருவது உனதுபொன் ஓட்டா மான மில்லா மாறும் கட்சி...
-
எந்த சூழ்நிலையிலும் என்னிணை நீயென்று என்றென்றும் சொல்வேனடி உனக்காக உன்னுடனேயே ஒவ்வொரு பொழுதும் கழியுமடி ஆயினும் ஆயிரம் அவஸ்தைகள் அத்தனையும்...