குறள் 1328:
ஊடிப்
பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
ஊடிய பிறகு
கூடியதால்நாடி நரம்பெல்லாம்
ஆடி அதிர
வடிந்த நெற்றி வேர்வையில்
தேடினாலும் கிடைக்காத
தெவிட்டாத இன்பம்
மீண்டும்
ஊடிக் கொள்ள
விளைந்திடுமோ?!!
குறள் 1328:
ஊடிப்
பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.
ஊடிய பிறகு
கூடியதால்
.
குறள்
1100
கண்ணொடு கண்இணை
நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
அன்பன்
அ. வேல்முருகன்

புல்லறிவாண்மை
குறள் 846:
ஆடைக் கட்டி அற்றத்தை
......ஆங்கே மறைத்து பயனென்
மூடன் குற்றத்தை மறைக்க
......மூடும் ஆடையால் பயனென்
மூடர் நினைப்பர் உயர்வாய்
......முரண றியாத கீழறிவால்
கோடைக்கு ஆடை விடையென
......கோணன் எண்ணும் அறிவால்
திருந்த திருத்தல் சரியே
......திருக்கு மறைக்க பிழையே
வருந்த பெருவாய் நீதியே
......வஞ்ச கனெனில் வீழ்வாயே
பெருங்குற் றந்தனை நாணி
......பிறரறியா நீக்க அழகே
ஒருங்கல் தொடர மனிதா
......உருமறைக் குமாடை வீணே
குறள் 207
எனைப்பகை
யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
பகையுடை வேந்தனுக்கு
……… பலவழி
உண்டு மீள்வதற்கு
பகைதனை அஞ்சாது
……… பழிபாவச்
செயலைச் செய்திட
வகைவகையாய்த் தீவினை
……… வழமையாய்த் தொடரும் மானிடனை
மிகையானத் பகையே
……… மடியும்வரை
தொடர்ந்து அழித்திடும்
தீயதுச் செய்தவனை
……… திரும்பித்
தாக்கிக் கொல்லும்
ஆய்ந்தால் அவன்செயல்
………. அவனுக்கு என்றே புரியும்
வீயாது என்பது
………. வினைக்குத்
திணையல்ல என்பதாம்
மாய்க்கும் வரையில்
……… மானுடனைத் தொடரும் தீவினையாம்
குறள் 837
ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.
தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...