புதன், மார்ச் 5

விழித்தெழு பெண்ணே











விழித்தெழு பெண்ணே
வித்தைகள் பழகிட
பழகிடும் வேளையில்
பகுத்தறிவை வளர்த்திடு

வளர்ந்திட்ட அறிவால்
வானத்தை களமாக்கு
களத்திலே சனிதனை
கோளென கொண்டாடு

கொண்டாட ஏழரை
கோலெடுத்து தண்டிக்கலாம்
தண்டிக்க எதிர்திடு
தரவுகளால் நிறுவிடு

நிறுவிட இராகுகேது
நிலவிற்குள் உறங்காது
உறங்கும் யாரையும்
உணர்வுட்டி எழுப்பிடு

எழுந்தால் சோதிடம்
எங்கும் வாழாது
வாழாத எதுவும்
வழக்கொழிந்து போகும்

போனபின் அறிவியலாய்
போலிகள் சான்றிடுவர்
சான்றுகள் சாட்சியின்றி
சாக்காட்டை நோக்கட்டுமே


அ. வேல்முருகன்



கருத்துகள் இல்லை:

அடையாளம்

ஆதி மனிதர்கள் ஆதாம் ஏவாள் போல அவர்கள் வாழ நினைத்தனர் தேர்ந்தெடுக்க தேவனுக்கும் தேவிக்கும் வாய்பில்லாமலிருந்தது ஆளுக்காருத் திசையில் அவர்களி...