வெள்ளி, மார்ச் 28
விவசாயம் காப்போம்
காடுமேடு திருத்தி
கழனியா இருந்ததை
சூடுசொரணை இல்லாது
சூறையாடி விட்டு
வளர்ச்சி என்று
வாய்சவடால் விடுகிறான்
களர்நில மானவுடன்
கார்ப்பரேட்டு மறையுறான்
சீர்காழியில்
சிதைந்தன நிலங்கள்
சிலகோடி டாலர் ஈட்டி
இறால் பண்ணைகளாய்
இன்றவை தரிசாக - அல்ல
என்றென்றும் தரிசானது
ஏமாந்தது விவசாயியல்ல
எல்லோருமே
கமலையில் நீரிறைத்து
கழினியிலே சேடையோட்டி
களத்திலே நெல்நிறைத்த
காலமெங்கே போச்சு
கருங்கல் கட்டிடமா
கழனியெல்லாம் மாறுது
காசு கிடைக்கிறதென
கண்மூடிக் கொண்டதனால்
வேம்பு, புளியமரங்கள்
வீதியை அகலமாக்க
வீழ்த்தப் பட்டது
வெயிலோ அதிகரித்தது
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அரிதான நெல்வகையை
அடுத்த தலைமுறைக்கு
அவரவர் பாதுகாக்க
மண்ணெல்லாம்
மலடாச்சு பூச்சுக்கொல்லியால்
என்னவெல்லாம் செய்யலாம்
நம் விவசாயம் காக்க
அ. வேல்முருகன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாதி
கண் கலந்து காதலில் விழுந்து கரம் பிடித்தேன் ஒன்னு கலந்து ஒரு பிள்ளையும் பெத்து ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன் வார்த்தெடுத்த வார்த்தைகளின...
-
அமெரிக்காவின் paypal நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் ஆண்டு விழா போட்டிகளின் ஒரு பகுதியாக பணியாளர்களை இப்பட...
-
ஜனநாயகத் திருவிழா ஜனநாயகன் திரைப்படம் சதிகளால் வரவில்லை என சந்துக்கு சந்துப் பேசிக் கொள்கிறார்கள் வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத க...
-
எலியும் பூனையும் இன்ன பிற “ஜந்துக்கள்” வசிக்க எளிதாய் இருப்பிடம் கண்டு பிடித்துவிடுகிறது நான்கு சுவர்களுக்குள் ...
-
காதலன் என்னிடம் கொண்டாயோ கரிசனம் ஆதலின் எமக்கு அளித்தாயோ தரிசனம் பார்வை தீண்டிட பெற்றேன் விமோசனம் தீர்வை கண்டிட தாராயோ அரியாசனம்
-
அச்சடிக்கும் இயந்திரத்தை அரசாங்கம் வைத்துக் கொண்டு அது ஏன்? வரிக்கு மேல வரிகளை போடுகிறது உழைத்துக் கிடைக்கும் ஊதியத்திற்கு உன்னிடம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக