செவ்வாய், மார்ச் 11

தன்னிலை மயக்கமேன்














தன்னிலை மயக்கமேன்
தண்ணீரில் மிதப்பதேன்
உன்நிலை மறக்கவா
உயிரைதான் மாய்க்கவா

இன்னிலை வாடாதோ
இளங்குருத்து கருகாதோ
நன்னிலை உயர்வன்றோ
நாநிலமும் மதிக்குமன்றோ

ஈட்டிய வருமானம்
ஈரற்குலை எரிக்கவா
வேட்டி அவிழ்ந்திட
வெட்கமின்றி சரியிற

நாட்டியம் ஆடுற
நாயோடு உறங்குற
போட்டியான உலகில்
பொறுப்பின்றி திரியுற

ஆறுகால பூசையிலே
அயர்ந்துறங்கும் கடவுளும்
ஊருலகம் உறவுமுறை
உன்நலம் காக்காது

கருவூலம் நிறைந்திட
கப்பம்தனை கட்டாதே
அருமையான வாழ்வுதனை
அறைகுறையா வாழாதே

                             அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...