ஞாயிறு, மே 4

கிழவி
















குமரனா நீ
கோபத்துடன்
கோமளவல்லி கேட்க

சுருக்கம் விழுந்ததாவென
சுறுசுறுவென
கண்ணாடியை தேடினவள்

பாட்டி வைத்தியத்தை
பலமுறைத் தேடி
பரிசீலித்துப் பார்க்க ஆரம்பித்தாள்

பப்பாளி, பாசிப்பயிறு
கசகசா என
எக்கச்சக்கமா சோதித்து

மாற்றம் தெரியுதா?
மறுவாரம் கேட்கிறாள்
என் கிழத்தி எனக்கு கிழவிதானே


                                         அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...