ஞாயிறு, மே 4

கிழவி
















குமரனா நீ
கோபத்துடன்
கோமளவல்லி கேட்க

சுருக்கம் விழுந்ததாவென
சுறுசுறுவென
கண்ணாடியை தேடினவள்

பாட்டி வைத்தியத்தை
பலமுறைத் தேடி
பரிசீலித்துப் பார்க்க ஆரம்பித்தாள்

பப்பாளி, பாசிப்பயிறு
கசகசா என
எக்கச்சக்கமா சோதித்து

மாற்றம் தெரியுதா?
மறுவாரம் கேட்கிறாள்
என் கிழத்தி எனக்கு கிழவிதானே


                                         அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

திரளழகு

திரளழகை தீபவொளி திருத்தி எழுதிட முரணேது முந்தானை முகமன் கூறிட மரகதவுடல் மச்சானை மகிழ்ச்சியில் ஆழ்திட சரசங்கள் பயின்றிட சரணடை பேரழகே நின்னசைவ...