திங்கள், அக்டோபர் 24

இயல்பாய் இருத்தல்

நீ இருப்பதை
நான் உணராமல் போனேன்

வீடு என்னவோ
மகிழ்ச்சியாகதான் இருக்கிறது

குழந்தைகள்
குதுகலித்துக் கொண்டிருக்கிறார்கள்

ஆயினும்- ஓர்
அன்னியம் வீட்டில்

உன் குரலோசை
குயிலாக இல்லை

உடலசைவுகள்
உள்ளத்தை சொல்லவில்லை

கேலி பேச்சுக்கள்
காணவில்லை

இணைந்துண்ணும்
இன்பம் இல்லை

உனக்காவோ எனக்காகவோ
எந்த பேச்சுமில்லை

பணிக்கு வழியனுப்பும்
பாங்கு மாறிவிட்டது

ஊடலும் கூடலும்
ஒதுக்கி வைக்கப்பட்டது

உன்னியல்பு மாறவில்லை என
உற்றார் உறவினர் புகழ்ந்தனர்

நானும் அறிவேன்-ஆயினும்
மாறிதான் இருந்தாய்

விருந்தோம்பலின் பொருட்டு
விடுமுறை அளித்தாயோ

2 கருத்துகள்:

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

ஊருக்குச்சென்ற மனைவியை பற்றி எழுதியது போல் புரிகிறது!

(((உன்னியல்பு மாறவில்லை என
உற்றார் உறவினர் புகழ்ந்தனர்))))


இந்த வரிகள் புரியவில்லை!

அ. வேல்முருகன் சொன்னது…

மன்னிக்கவும் புரியுமளவு எழுதாதற்கு. அவள் அவனை பற்றி சொல்வதாக படியுங்கள்

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...