சனி, ஜூன் 1

ரஃபா









அவர்கள்
எங்க வீட்டை
குண்டுகளால் அழித்து விட்டார்கள்

புழுதிப் படிந்த உடலோடு
குருதி வழிய
புலம்பிச் செல்பவள்

அயலகத்து குழந்தை யென்று
தியானத்திலமர்ந்து
கடந்துச் செல்லாதீர்கள்

எதற்காக எனவறியாது
யாராலெனப் புரியாது
குழந்தைகள் மரணிக்கின்றன

அதே மதவாதம்
எதேச்சையாக
எங்கும் நிகழலாம்

அதிகார போதையில்
ஆங்காங்கு பிரித்தாளும்
ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்

வேட்டுச் சத்தம்
கேட்டுக் பழகியிருக்கலாம்
வாழ்ந்து பாருங்கள்

சிறுச் சத்தத்திற்கு
மரணத்தை எதிர் நோக்கி
திடுக்கிட்டெழும் சிறார்கள்

ஐந்து இலட்சம் குழந்தைகள்
ஐயோ……….
ஆரும் கேட்பாரில்லை

ஐக்கிய நாடுகள் சபை
ஆட்சியாளர்கள் சார்பாக
இரைஞ்சுவதாக நடிக்கிறது

ஹார்வர்ட் பல்கலை மாணவர்கள்
பாதகை தாங்கி – உலகை
பார்க்கத் தூண்டுகிறார்கள்

விடுதலை தாகத்தோடிருந்தவனா
கொலைகளத்தை விரிவுப்படுத்தி
சாத்தானாக மாறிவிட்டான்

இறைவனால் படைக்கப்பட்ட
இந்த இனம் - யாருக்கு
இறப்பைக் காணிக்கையாக்குகிறது

அகதியாய் முகாம்களில்
ஆயினும் வான்தாக்குதலில்
ஆயிரமாயிராய் கொல்லப்பட

நிலத்தின் எல்லையா,
மதத்தின் தேவையா
இனத்தின் மீதான வெறுப்பா

குற்றம் புரியாத
குழந்தைகள் கொலையாக
குற்றம் புரிந்தவன் யார்?

அமெரிக்காவை
ஐநா சபையை ஆட்டுவிக்கும்
இஸ்ரேலியர்கள்

உளவில், சிந்தனையில்
உயர்ந்தவனாய் வேடமிடலாம்
ஆயினும் மானுடத்தின் எதிரிகள்

நீதி வேண்டுவது
“ரஃபா” வுக்கு மட்டுமல்ல
மானுடத்திற்கு



அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

உன் பார்வையின் பொருள்

  தொல் காப்பியத்தில் தேடத் தொடங்கினேன் இலக்கண விதிகள் – பார்வைக்குத் தட்டுப்படவில்லை சங்க இலக்கியத்திலும் சதுரகராதியிலும் சுழன்றுத் தேடினே...