ஞாயிறு, பிப்ரவரி 15

கண்ணசைவு















காத்திருந்த கண்ணனுக்கு
கண்ணசைவில் கதைகளா
நேற்றிருந்து நித்திரையில்
நிலவொளியாய் ஆடுதியே
பூத்திருக்கும் ஆசைகளை
பூவிழியில் சொல்லுதியே
யாத்திரையின் வழிதனை
யாழினில் இசைக்குறியே

விழியரங்க வித்தைக்கு
வியாக்கானம் எழுதுகிறேன்
அழியாத அக்காட்சி
அக்மார்க்காய் பதிகின்றது
எழிழ்மிகு இமைகளும்
எனையே தாக்குகிறது
மொழியற்ற முகவரிகளில்
மொக்குகள் மலர்கிறது

காதலைக் கற்பிக்கும்
கருவிழி நாடகங்கள்
நாதனை நானாவிதம்
நாள்தோறும் நோக்கும்ரதம்
மேதமை கருவிழிகள்
மேதினியில் மோதும்வரை
வேதிவினை மாற்றங்கள்
வேந்தனிடம் விளைந்திடுமே


அ. வேல்முருகன்





கருத்துகள் இல்லை:

கண்ணசைவு

காத்திருந்த கண்ணனுக்கு கண்ணசைவில் கதைகளா நேற்றிருந்து நித்திரையில் நிலவொளியாய் ஆடுதியே பூத்திருக்கும் ஆசைகளை பூவிழியில் சொல்லுதியே யாத்த...