திங்கள், பிப்ரவரி 16

ஒய்யாரம்

















விலகி விலகாத
விடிவெள்ளி விழித்தேன்
உலகில் உருவான
ஒய்யாரம் ரசித்தேன்
துலங்கிடும் பேரழகில்
துள்ளிதுள்ளித் திரிந்தேன்
நலங்கிட்டு நானுனை
நாயகியாய் கொண்டேன்

மஞ்சத்தில் மயக்கம்
மன்னனை நினைத்தா
அஞ்சனமும் அகிலும்
அத்தானை அணைப்பதற்கா
கெஞ்சிக் கொஞ்ச
கொட்டிப் பேசுவியோ
தஞ்சமென நெஞ்சை
தந்தபின் மிஞ்சுவியோ

வெற்றிலைத் தரித்து
வேள்வியில் விற்பன்னராய்
சிற்றிடையில் கற்றிட
சிறகொன்று முளைத்திட
முற்றிலும் முகிழ்ந்து
முடிவின்றி தொடர்ந்திட
இற்றிசையில் இற்கிழத்தி
ஈந்தது பேரின்பமே


அ. வேல்முருகன்




கருத்துகள் இல்லை:

ஒய்யாரம்

விலகி விலகாத விடிவெள்ளி விழித்தேன் உலகில் உருவான ஒய்யாரம் ரசித்தேன் துலங்கிடும் பேரழகில் துள்ளிதுள்ளித் திரிந்தேன் நலங்கிட்டு நானுனை நாயகியா...