செவ்வாய், டிசம்பர் 27

குங்குமம் வைத்தால் குழந்தை (அ) ஆதிஜெகந்நாத பெருமாள்

கடந்த வாரம் அலுவல் நிமித்தம் இராமநாதபுரம் சென்றிருந்தேன்.  உடன் வந்தவர்கள் திருப்புலானி சென்று ஆதிஜெகந்நாத பெருமாளை பார்க்க வேண்டுமென்பதால் அவர்களுடன் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உடன் சென்றேன்.

எதற்கு இரண்டு தலைப்பு என்றால் குழப்பம்தான் காரணம். நாத்திகன் பெருமாளை காணச் சென்றதால் இக்குழப்பமாக இருக்கலாம்.

கூட்டமே இல்லாத கோயில், சேதுகரை அருகில், திடீரென்று மூன்று வேன்கள், ஐயப்ப பக்தர்கள் இறங்கினர். தமிழில் அர்ச்சனை.

தசரதன் இங்கு வந்து இப்பெருமாளை வணங்கியதால் இராமன் பிறந்ததாக பூசாரி கூறுகிறார்.  அதனால் குழந்தை பேறு இல்லாதவர்கள் இப்பெருமாளை வணங்கினால் பிள்ளை பிறக்கும் என்கிறார் பூசாரி.

அசுவமேத யாகம் நடத்தி இராமன் பிறந்ததாக புராணம் படித்த நமக்கு குழப்பம். யாகத்தின் முடிவில் தசரதனின் மனைவி குதிரையுடன் உறங்கி குழந்தை பெற்றதாக கதை படித்த ஞாபகம்.

பூசாரி அழைக்கிறார் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், இப்பெருமாளை நினைத்து ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் கணவன் மனைவி இருவரும் நீராடி, கணவன் தன் கையால் மனைவிக்கு குங்குமம் வைத்தால் குழந்தை பாக்கியம் பெறுவர்.  பெண் பிறந்தால் தயார் பெயர் வைக்குமாறு கூறுகிறார்.

ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு நபர் மாட்டுகிறார்.  அவரிடம் ரூ.101 கொடு என்கிறார். பிறகு பெயர் நட்சத்திரம் கேட்டு பெருமாளிடம் கற்பூரம் காட்டி துளசி கொடுத்து அனுப்புகிறார்.

சொல்லுங்கள்

குங்குமம் வைத்தால் மட்டும் குழந்தை பிறக்குமா

101 என்ன கதை...... 100 என்றால் ஆகாதா



கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...