வெள்ளி, பிப்ரவரி 14

ரௌலட் சட்டமும் ராட்சசியும்



நான் கண்ணனோ
நீ ராதையோ
அல்லதான்

கண்களால் கவனித்து
கனிந்த இதயத்தால்
காதலர்கள்தான்

அடியே
ஆயினும் என்ன
அவசரச் சட்டம்

பிப்ரவரி 2014 ல்
பேசாமல் வதைக்கும்
ராட்சசியே

மார்ச் 1919-ல்தான்
ஆங்கில சர்காரின்
ரௌலட் சட்டம்

பேச்சும், எழுத்தும்
ஒத்த கருத்துடையோரும் – அன்று
கூடுவது தடையாயிருந்தது

கல்யாண ஊர்வலமும்
கனியகனிய பேசுதலும்
கூடுதலுக்கு வழியடி

காரணமின்றி கைதாவது
காதலிலும் உண்டு – அந்த
ரௌலட்லிலும் உண்டு

சந்தேகப் படுதல்
உன்னிலும் உண்டு
உரிமையற்ற அதிலுமுண்டு

விசேட நீதிமன்றத்தில்
விதியின்றி விசாரிப்பர்
மேல்முறையீடும் இல்லாதென்பர்

வாதமும் மேல்முறையீடும்
வாய்தா இல்லா வாய்ப்பு
வாழ்க்கையில் இணைய

உயிர்
மாட்சிமை தங்கிய
மன்னரின் கருணை

ஆம். தேவி
கருணை வேண்டுமடி - உனது
கண்ணாளன் நானடி

சத்தியாகிரகம், ஒத்துழையாமை
சட்டென்று நிறுத்தினார்
உத்தமர் காந்தி

உத்தமியே
ஊடலின் துன்பத்தை
உடனே நிறுத்தடி

ஜாலியன் வாலாபாக்
ரௌலட் சட்டம் – அது
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம்

வாலிபன் வாழ
தடா, பொடா தவிர் – இது

இந்திய குடியரசுயாயினும்

4 கருத்துகள்:

அம்பாளடியாள் சொன்னது…

மிகவும் ரசிக்க வைத்த காதலர் தினக் கவிதை அருமை ! உங்களுக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அன்பு தினம் என்றும் வேண்டும்...
தினம் என்றும் அன்பாக வேண்டும்...

வாழ்த்துக்கள்...

ADMIN சொன்னது…

இனிமை

பெயரில்லா சொன்னது…

ஒப்பீடு மிக நன்று.
வேதா. இலங்காதிலகம்.

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...