செவ்வாய், ஜனவரி 2

சும்மா அதிருதில்ல


அந்த அறிவிப்பால்
சும்மாவாது
அதிர்ந்ததா?...

வாய்ச் சவடாலில்
வந்துட்டேனுச் சொன்னதால்
வாசல் திறந்திடுமா

ஏமாற்றும் கூட்டத்தின்
எண்ணிக்கைக் கூடியதாக
இனம்காண் தமிழகமே

ஜகத்குரு, நித்தி
ஜக்கியின் ஆன்மீகத்தை
ஜனநாயகமாய் கண்டோம்

மரபுகளை மாற்றி
தியேட்டரில் கேசட் விற்றவன்
கேப்பையில் நெய் வடியுமென்கிறான்

எதுச் சரி
எதுத் தவறென
ஏதும் அறிவிக்காமல்

இறங்கி வந்த
இறை தூதனா?!!
எதை மாற்றுவான்

கோடிகளில் புரண்டு
கேமராமுன் வசனம் பேசி
நாடாள வருவேனேன்றால்

சன்னி லியோனை
சட்டமன்ற உறுப்பினராக்க
சான்றொப்பம் அளிப்பாயோ?

ஓடுறக் குதிரையென
நோட்டைப் புடுங்கினவன்
ஓட்டைக் கேட்கிறான்

ஏலமெடுத்த டிக்கட்டை
எவனும் வாங்காததால்
எறிந்தாயேக் குப்பைத் தொட்டியில்

மறக்காத வடுவது........
கறக்கலாமென நினைத்தால்
காலமாவது நீதான்

H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...