ஏமாற்றுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏமாற்றுதல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மார்ச் 1

இலக்கணப் பிழை






கற்றலில் கரைகண்டது
  கண்ணுற்றா கற்சிலை வடித்தா
அற்றை தினத்தில்
  அறமற்று காணிக்கை கேட்டதா
சற்றேனும் வெட்கமின்றி
   சங்கறுக்க கற்றது அருச்சுனனா
பட்டென்று வெட்டி
   படைக்கப் பெற்றவன் ஏகலைவனா

கேட்டதும் கொடுத்தவன்
   கற்றலில் சிறந்த மாணவனா
கேட்டும் கொடுக்காதவன்
   கற்பித்தலுக்கு இலக்கணம் ஆனவனா
சூட்சம வெற்றிக்கு
   சுற்றம் பார்த்தல் பிழையே
ஆட்சேபனை ஏதுமில்லை
   அசுவத்தமா ஹதமென்பதும் கலையே

செவ்வாய், டிசம்பர் 25

நாளொன்றுக்கு ஐந்தரைக் கோடி


முகநூல், இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் அங்கொரு விலாசம் உண்டு.  இலவசமாக கிடைக்கிறதா இந்த சேவை. இல்லை

உங்கள் தகவல்களை காசாகிக் கொண்டு  கொழிக்கிறது.  ஆனால் அது போதவில்லை என்று அதன் முதலீட்டாளர்கள்  இந்நிறுவனத்தை மேலும் அழுத்தம் கொடுக்கிறது

நாளொன்றுக்கு ஐந்தரைக் கோடி வருமானம் ஈட்டுகிறது இந்த தளம்.  கடந்த ஆண்டு ஒரு முகநூல் பயனாளர்  மூலம் ரூ.65.46 கிட்டியது என்றால் இந்த ஆண்டு ரூ.68.76 என்று இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் கூட வேண்டும் என்பது முதலீட்டாளர்களின் விருப்பம்.  அதற்காக முகநூல் நடத்துபவர்கள் உங்கள் தகவல்களை விற்க முன்வந்து விட்டார்கள்.

ஆம். ரூ.55 கொடுத்தால் நீங்கள் தனிப்பட்டது என்று வைத்திருக்கும் தகவல் முதல், உங்கள் தொடர்பு தகவல் வரை கொடுக்க தயாராகி விட்டது.

அடுத்து உங்கள் தகவல் பலகையில் மிக அதிகமான விளம்பரங்கள் வந்து விழப் போகிறது.  நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் முகநூல் பக்கத்தை பயன் படுத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமான வருமானம் முகநூல் நிறுவனத்திற்கு.

அதுமட்டுமல்ல,  சில இணையதளங்கள் மற்றும் மென்பொருள்கள் தானகவே முகநூலிலிருந்து தங்கள் தகவல்களை திரட்டி கொள்ளப் போகிறது.  அதற்கு காசு முகநூல் நிறுவனம் பெற்றுக் கொள்ளும்.

ஆக யோசித்து செயல்படுங்கள். தனிப்பட்ட தகவல்களை தவிருங்கள்.


திங்கள், செப்டம்பர் 3

5 கிலோ சர்ப் இலவசம்

ஓர் உண்மை நிகழ்ச்சி


மாலை ஒரு 4 மணி வாக்கில் 60 வயதுள்ள அவர்  2வது மாடியிலுள்ள   தனது வீட்டு பலகனியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.   மோட்டார் சைக்கிளில் சாலையில் சென்ற 30 வயது இளைஞன் கையை அசைத்து என்ன சார் சௌக்கியமா?

ஆங்......   நல்லா இருக்கிறேன்.

சார் நான் கொடுத்த அந்த புராடக்ட் நல்லா இருக்கா

ம்..........

மோட்டார் சைக்கிளை நிறுத்தி நேராக மாடி ஏறி சென்று விடுகிறான்.

அவர்கள் வீட்டில் ஒரு குழந்தை ட்யூஷன்  படிக்கிறது

அதனிடம் சகஜமாக பேசுகிறான்.

சார் அந்த புராடக்ட்..........

எதுப்பா? வாட்டர் பில்ட்டர் அக்குவா கார்டா?

ஆமா சார் எப்படி வேலை செய்கிறது

நல்லா இருக்கு

சரி நீ எப்படி இருக்க?

சார் நான் இப்ப அந்த கம்பெனியில் இல்ல

சட்டென்று காலில் விழுகிறான்

என்னை ஆசிர்வாதம் செய்ங்க சார்.  இப்ப கோத்ரேஜ் கம்பெனியில் மேனேஜரா சேர்ந்திருக்கிறேன்.

எங்க வீட்டில வாஷிங் மிஷின் சரியா வேலை செய்ல

அப்படியா எங்க காமிங்க சார்.

எங்க கம்பெனியில் ஒரு ரோட் ஷோ  அந்த பஸ் நிறுத்தம் அருகே  போட்டிருக்கிறோம்.  BUY BACK OFFER ல உங்க பழைய மிஷன எடுத்துக்கிட்டு புது மிஷன் தருகிறோம்.  ரூ.7500 மட்டும்தான் 5 கிலோ சர்ப் இலவசம்.  மேலும் ரூ,2000 கொடுத்தா ஒரு கிராம் தங்க நாணயம் கொடுக்கிறோம் சார்.

சரி செக்கா தருகிறேன்  இன்னிக்கே டெலிவரி கொடுத்துருவியா


இல்ல சார் மாத கடைசி ஆபர், பணமாதான் கொடுக்கணும்

என்கிட்ட பணம் இல்ல

பக்கத்துல்ல ஏ டி எம் ல எடுத்துக் கொடுங்க சார்.  15 நிமிடத்தில மெஷின் டெலிவரி.

சட்டையை மாட்டிக்கொண்டு கீழே இறங்குகிறார்

கீழ் வீட்டில் சற்று தள்ளி நின்றிருக்கும் மாமியின் அருகில் சென்று நலம் விசாரிக்கிறான் இளைஞன்.  அவர்களும் சிரித்துக் கொண்டே பதில் சொல்கிறார்கள்.

தனது மோட்டார் சைக்கிளில் அமர வைத்து ஏ டி எம் அழைத்து செல்கிறான்.

பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது ஒருவரை நிறுத்தி அவன் பேசிக் கொண்டிருப்பதை பார்க்கிறார்.

அடுத்த தெருவில் காலையில் ஒரு மிஷன் டெலிவரி செய்ததாக சொல்கிறான்.   வழியில் நிறுத்தி பேசிக் கொண்டிருந்தவரிடமும் சொல்கிறான் சார் உங்களுக்கு மிஷின் வேணுமென்றால் அடுத்த தெரு பஸ் நிறுத்தம் அருகே வரச் சொல்கிறான்.

சார் பணம் கொடுங்க ஒரு பத்து நிமிஷத்தில மிஷினோட வர்றேன்.  இவர் ரூ.7500 மட்டும் கொடுக்கிறார்.

சார் ஆபர்ல ரூ. 2000 கொடுத்தா ஒரு கிராம் தங்க நாணயம் தாராங்க .  இன்றைய தங்க விலை ரூ.3000 சார்.  ஏதோ நினைத்துக் கொண்டு ரூ.2000 சேர்த்துக் கொடுக்கிறார்.

இதோ வந்திடுறேன் சார்........

15 நிமிடம்........

30 நிமிடம்  ............ சே காலில் விழுது ஆசிர்வாதம் வாங்கியவன்

60 நிமிடம்  அவன் சொன்ன அந்த பேரூந்து நிறுத்தம்.

விசாரிக்கிறார்.   அப்படியொரு ஷோ அன்று நடை பெறவே இல்லையாம்

வீட்டிற்கு ஓடி வருகிறார்.  டெலிபோன் டைரக்டரியில் கோத்ரேஜ் நெ தேடி தொடர்பு கொள்ள 

அவர்கள் இதே போன்று நங்க நல்லூரில் ஒருவன் சிலநான் முன்பு ஏமாற்றினான்.  நீங்கள் ஜாக்கிரதையா இருக்க கூடாதா என்கிறார்கள்.

தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையம் செல்ல

சார் மோட்டார் சைக்கிள் நெ தெரியுமா?  ஐடி கார்டு பார்த்தீங்களா

என்ன சார் ....  எதுவுமே தெரியாதா

எப்படி கம்பிளையண்டு எழுதுறது.  அந்த ஆள எங்கியாவது பார்த்த நீங்களே சொல்லுங்க சார்

விதியை நொந்து கொண்டு வந்து விட்டார்

இப்போது  Hindu  வில்   Letter to Edit  எழுதி கொண்டிருக்கிறார்
Mylapore Times  க்கு அவருடைய சோதனையை எழுதி 

மூத்த குடிகளே உஷார் என்கிறார்


இந்த சோகத்திற்கு சொந்தக்காரர் எனது பக்கத்து வீட்டுக்காரர்


எனவே ஆபத்தை நீங்களே விலைக் கொடுத்து வாங்காதீர்கள்

விழிப்புடன் இருங்கள்


குறும் படம் எடுக்கும் பதிவர்கள் இந் நிகழ்வை குறும் படமாக எடுத்து ஒரு விழிப்புணர்வை எல்லோரிடமும் எடுத்து  செல்லுங்களேன்.





புதன், ஆகஸ்ட் 22

கணக்கு

வணிக நிறுவனங்கள் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் போது ஒரு பக்கம்  நன்மதிப்பு (Goodwill) என்று காண்பிப்பார்கள்.  இத்தனை ஆண்டு அவர்கள் நடத்திய தொடர் வணிகத்தால் ஏற்பட்ட நன்மதிப்பு என்பது கணக்கு.

அதற்கு என்ன?

தற்போது தங்களின் குடும்ப பெயர் பயன்படுத்துவதால் ஏற்பட்ட நன்மதிப்பிற்கு இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது சதவிகிதத்தில் 0.5%   அல்லது அதற்கு குறைவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த பழக்கம் 90 களின் ஆரம்பத்தில் டாடா/கோத்ரேஜ் நிறுவனங்கள் ஆரம்பித்து வைத்ததாம் இந்திய பெருமுதலாளிகளின் சார்பாக

ஏன்?

மிகப்பெரிய குழுமம் ஒரு துணை நிறுவனம் ஆரம்பிக்கும் போது குழுமத்தின் பிரதான பெயரை இணைத்தோ அல்லது அக்குழுமத்தின் துணை நிறுவனம் என்றோ ஆரம்பிப்பதால் ஏற்படும் நன்மதிபிற்கு
புதிய நிறுவனம் இத்தொகையை பிரதான முதலீட்டாருக்கு கொடுக்க வேண்டும்.

நிறுவன விதிகள் என்ன சொல்கிறது?

ஒரு அசாதாரண பொதுக் கூட்டம் நடத்தி அதில் 75%  வாக்குகள் பெற்றால் இது சாத்தியமாகும்.  ஆனால் இது போன்ற நிறுவனங்கள் 75% பங்குகளை தாங்களும் தாங்கள் சார்ந்த நிறுவனங்களும் வைத்திருப்பதால் இது ஒன்றும் பெரிய வேலையில்லை.  

எதற்கு இந்த கதை

சமீபத்தில் பிரிட்டானிய பிஸ்கட் நிறுவனம் நடத்தி வரும் நுஸ்லி வாடியா தனக்கும் தன் குடும்பத்திற்கும் இதுபோன்று ஒரு லாபம் வேண்டும் என கூறுகிறார்

யார் இந்த நுஸ்லி வாடியா

பாம்பே டையிங், கோ ஏர் போன்ற நிறுவனங்களின் முதலாளி, இந்திரா காந்தியிடம் ஏற்பட்ட சிறு பிரச்சனையால் ரிலையன்ஸ் என்னும் மிகப் பெரிய சாம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்தவர்.

இந்த ஆண்டு இலாபம்

The key listed firms of the group are biscuit maker Britannia Industries Ltd, plantations company Bombay Burmah Trading Corp. Ltd, textile manufacturer Bombay Dyeing and Manufacturing Co. and chemical producer National Peroxide Ltd, which together earned Rs. 13,772 crore in revenue in fiscal 2012.

இந்த வருமானத்தில் 0.25%  வேண்டுமென்பது தீர்மானம்

இவர்கள் மட்டும்தானா இந்த ஓட்டத்தில்

அட நம்ம ஊர் ஸ்ரீராம் குழுமத்தின் தியாகராஜன் இதேபோல் வேண்டுகிறார்.  முத்தூட் நிறுவனத்தின் முதலாளி தான் 50% மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் வரை நன்மதிப்பாய் ஒரு வருவாய் வேண்டுமென்கிறார்.

ஏன் கூடாதா

அவர்கள் நிறுவனம், அவர்கள் இலாபம் ஏன் கூடாதா என்கிறீர்களா.  ஆம் கூடாது.  நட்சத்திர பங்குகள் என்று சிறு முதலீட்டாளர்கள் இதில்தான் முதலீடு செய்துள்ளனர்.   அவர்களுக்கு கிடைக்கும் வருவாயில் இந்த பெருமுதலாளிகள் கை வைக்கின்றனர்

எனவே கூடாது என்பது என் வாதம்

நீங்கள் சொல்லுங்கள் மக்களே
----------------------------------------------------------------------------------------------------------------------------------

சகபதிவர் ஒருவர் எனக்கு பட்டம் வழங்கியுள்ளர்.  என்ன பட்டம்   http://thmalathi.blogspot.in/2012/08/blog-post_19.html என்பதை இங்கு சென்று காணுங்கள்.  பட்டத்திற்கு வாழ்த்துக்களும் குவிந்திருக்கின்றன.  காரணத்தை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.


புதன், டிசம்பர் 28

பாரமவுண்ட் விமான நிறுவனம் - கடன் நிலுவை


பாரமவுண்ட் ஏர்வேஸ் என்ற விமான நிறுவனம் பொதுத் துறை வங்கிகளிடம் பெற்ற கடன் விவரம் மேலே இணைக்கப்பட்டுள்ளது.  இதன் படி ரூ.437 கோடி கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது.   ஆனால் உண்மையில் வங்கிகளுக்கு ரூ.2000 கோடி செலுத்த வேண்டியிருப்பதாக சொல்லப்படுகிறது,

இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால்,  மேற்கண்ட இக்கடன்களுக்கு எந்தவித ஈட்டுறுதியும் அதாவது எந்தவிதமான அசையா சொத்தும் கடனுக்கு ஈடாக கொடுக்காமல் பெற்றுள்ளது.

கல்வி கடன் ரூ.10 லட்சம் வேண்டுமென்றால் 1008 விதிகள், கண்டிப்பாக அசையா சொத்து ஈட்டுறுதி வேண்டுமென்று கேட்கும் வங்கிகள் எப்படி இக்கடனை வழங்கியது.

ஓ அதனால்தான் இந்த முறைகேடை விசாரிக்க அனைத்து வங்கிகளும் சி.பி,ஐ விசாரிக்க பரிந்துரைத்து விட்டு அமைதியாக இருக்கின்றன. சி.பி.ஐ.  விசாரித்து ஏதாவது பணம் வசூல் ஆகியுள்ளதா சொல்லுங்கள் மக்களே

புதன், ஜூலை 13

1947 முதல் நடந்த ஊழல் பட்டியல்


எனக்கு வந்த மின்னஞ்ஞல்,  ஏதேனும் விடுபட்டது என்றால் சேர்த்து  சொல்லுங்கள்.  கோடிக்களுக்கு மதிப்பில்லை என்று சும்மா இருந்து விடாதீர்கள்.

சனி, ஜூன் 25

கருணாநிதியின் (& Co) அசையா சொத்துக்கள்

எனக்கு இன்று வந்த மின்னஞ்ஞல் செய்தி
1.    கருணாநிதியின் கோபாலபுரம் வீடு 6124 சதுர அடி. மதிப்பு கோடி.
 
2.    முரசொலி மாறனின் கோபாலவுரம் வீடு மதிப்பு கோடி
 
3.    முரசொலி செல்வம் வீடு கோபால புரம் 1200 சதுர அடி. மதிப்பு கோடி
 
4.    சொர்ணம் பெயரில் உள்ள வீடுகோபாலபுரம் மதிப்பு ரூ.கோடி
 
5.    மு.க.முத்து பெயரில் உள்ள வீடுகோபாலபுரம்மதிப்பு ரூ.கோடி
 
6.    அமிர்தத்தின் வீடுகோபாலபுரம் மதிப்பு ரூ.கோடி
 
7.    செல்வி மகள் எழிலரசி பெயரில் கோபாலபுரம் வீடு. மதிப்பு கோடி.
 
8.    சிஐடி காலனி ராசாத்தி அம்மாள் வீடு 9494 சதுர அடி நிலம். 3500 சதுர அடி கட்டிடம் மதிப்பு 5கோடி.
 
9.    மண்ணிவாக்கம் கிராமத்தில் 300 ஏக்கர் நிலம் ராசாத்தி அம்மாள் மற்றும் கனிமொழி பெயரில் மதிப்பு 4.5 கோடி.
 
10.    ராயல் பர்னிச்சர்ஸ் ராசாத்தி அம்மாள் பெயரில் உள்ளது. மதிப்பு 10 கோடி
 
11.   மு.க.ஸ்டாலின் பெயரில் வேளச்சேரியில் உள்ள வீடு. 2687 ச.அடி நிலம். 2917 ச.அடி கட்டிடம். மதிப்பு கோடி.
 
12.   உதயநிதியின் ஸ்னோ பவுலிங்நுங்கம்பாக்கம் மதிப்பு கோடி.
 
13.   கலாநிதி மாறனின் போட் கிளப் வீடு. 16 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
 
14.   கொட்டிவாக்கம் அருகே பண்ணை வீடு மாறன் சகோதரர்கள் 10 கோடி.
 
15.   ராமச்சந்திரா மருத்துவமனை அருகே எம்எம் இன்டஸ்ட்ரீஸ் மதிப்பு கோடி.
 
16.   கோடம்பாக்கம் முரசொலி கட்டிடம் கிரவுண்ட் நிலம் மற்றும்அரசு நிலம் 1472 சதுர அடி ஆக்ரமிப்பு. மதிப்பு 20 கோடி.
 
17.   சன் கேபிள் வி஦#183ன்மஹாலிங்கபுரம்கோடம்பாக்கம் கிரவுண்ட் நிலம் மற்றும் உபகரணங்கள். கோடி.
 
18.    சன் டிவியின் எம்ஆர்சி நகர் நிலம் 32 கிரவுண்டுகள். மதிப்பு 100 கோடி.
 
19.   கோரமண்டல் சிமின்ட்ஸ் நிறுவனத்தில் 11 சதவிகித பங்குகள். மதிப்பு 50 கோடி.
 
20.   பெங்களுரில் செல்வம் பெயரில் படுக்கையறை கொண்ட ஃப்ளாட். மதிப்பு கோடி.
 
21.    பெங்களுர் மைசூர் சாலையில் செல்விக்கு சொந்தமான ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 80கோடி.
 
22.   மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான 1.84 ஏக்கர் பண்ணை வீடு. மதிப்பு 120 கோடி.
 
23.   பெங்களுரில் உள்ள உதயா டிவி அலுவலகம். 10 கிரவுண்ட் நிலம். மதிப்பு 108 கோடி.
 
24.    மு.க.தமிழரசுவின் ரெயின்போ பிரின்டர்ஸ்பீட்டர்ஸ் சாலை. மதிப்பு 48 கோடி.
25.   மு.க.தமிழரசுவின் அந்தியூர் நிலம் 13 கிரவுண்டுகள்.   மதிப்பு 30 லட்சம்.
 
26.   சன் டிவியின் டெல்லி அலுவலகம்.   மதிப்பு 50 கோடி.
 
27.   எக்ஸ்பிரஸ் எஸ்டேட்சில் பங்கு (மதிப்பு தெரியவில்லை)
 
28.   தினகரன் பப்ளிகே஦#183ன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
 
29.   சுமங்கலி பப்ளிகே஦#183ன்ஸ் (மதிப்பிட முடியவில்லை)
 
30.   முரசொலி ட்ரஸ்ட் (மதிப்பு தெரியவில்லை)
 
31.   ஸ்பைஸ் ஜெட் நிறுவன பங்குகள் 37 சதவிகிதம் ஒரு பங்கு 48 ரூபாய் விலைக்கு அமேரிக்க முதலீட்டாளர் வில்பர் ராஸ் மற்றும் ராயல் ஹோல்டிங்ஸ் சர்வீசஸ் என்ற நிறுவனம் மூலமாக,கன்ஸக்ரா என்ற குடும்பத்திடமிருந்து வாங்கப் பட்டது. இதை வாங்கும் போததனது மொத்த மதிப்பு என்று கலாநிதி மாறன் குறிப்பிட்டது 13,384 கோடி.
 
32.   தயாளு அம்மாள் ட்ரஸ்ட் பெயரில்மதுரை மாவட்டம்மாடக்குளம் கிராமத்தில் 21 சென்ட் ஏக்கர் நிலம்
 
33.   தஞ்சாவூர் மாவட்டம்அகரத்திருநல்லூர் கிராமத்தில் 21.30 ஏக்கர் நிலம்கருணாநிதி பெயரில்.
 
34.   தயாளு அம்மாள் பெயரில் திருவள்ளுர் மாவட்டத்தில் 3.84 ஏக்கர் நிலம் மதிப்பு கோடி.
 
35.   துர்கா ஸ்டாலின் பெயரில் நந்தியம்பாக்கம்திருவள்ளுர் மாவட்டத்தில் 3680 ச.அடி நிலம். மதிப்பு 60 லட்சம்.
 
36.     மதுரை வடக்கு தாலுகாஊத்தங்குடி கிராமத்தில் 2.56 ஏக்கர் அழகிரி பெயரில் மதிப்பு 2கோடி.
 
37.   மதுரை வடக்கு தாலுகாகள்ளந்திரி கிராமத்தில் 7.53 ஏக்கர் நிலம் மதிப்பு கோடி.
 
38.   மதுரை தல்லாகுளத்தில் 1.54 ஏக்கர்அழகிரி பெயரில் மதிப்பு கோடி.
 
39.   மதுரை வடக்கு தாலுகாசின்னப்பட்டி கிராமத்தில் 1.54 ஏக்கர் நிலம் அழகிரி பெயரில் மதிப்பு40 லட்சம்.
 
40.   மதுரை திருப்பரங்குன்றம் 12 சென்ட் நிலம். அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
 
41.    மதுரை தெற்குமாடக்குளம் கிராமத்தில் 36 சென்ட் நிலம் அழகிரி பெயரில். மதிப்பு கோடி.
 
42.   மதுரை தெற்குபொன்மேனி கிராமத்தில் 18,535 சதுர அடி நிலம் அழகிரி பெயரில் மதிப்பு 2கோடி.
 
43.   மதுரை சத்யசாய் நகரில் 21 சென்ட் நிலத்தில் அழகிரி பெயரில் வீடு. மதிப்பு கோடி.
 
44.   மதுரை மாவட்டம்வாடிப்பட்டி தாலுகாதோகரை கிராமத்தில் காந்தி அழகிரி பெயரில் 21.6சென்ட் நிலம். மதிப்பு 60 லட்சம்.
 
45.   மதுரை மாவட்டம்நாகைமலை புதுக்கோட்டைகே.புளியகுளம் கிராமத்தில் 5.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில். மதிப்பு 20 லட்சம்.
46.    மதுரை மாவட்டம்மேலமாத்தூர் கிராமத்தில் 12.61 ஏக்கர் நிலம்தயாநிதி அழகிரி பெயரில். மதிப்பு 50 லட்சம்.
 
47.   மதுரைதிருமங்கலம்டி.புதுப்பட்டி கிராமத்தில் 21.32 ஏக்கர் நிலம் காந்தி அழகிரி பெயரில் மதிப்பு 50 லட்சம்.
 
48.   கொடைக்கானல் மலைப் பகுதியில் காந்தி அழகிரி பெயரில் பண்ணை வீட்டோடு கூடிய 82.3சென்ட் நிலம். மதிப்பு கோடி.
 
49.    தயாநிதி அழகிரி பெயரில் மாடக்குளம் கிராமத்தில் 18.5 சென்ட் நிலம். மதிப்பு 50 லட்சம்.
 
50.   சென்னைசோழிங்கநல்லூரில்தயாநிதி அழகிரி பெயரில் 4200 சதுர அடி நிலம். மதிப்பு 2.5கோடி.
 
51.   சென்னை திருவான்மியூரில்தயாநிதி அழகிரி பெயரில் 3912 சதுர அடி நிலம். மதிப்பு கோடி.
 
52.   காந்தி அழகிரி பெயரில் 4378 சதுர அடியில்மதுரை சத்ய சாய் நகரில் திருமண மண்டபம். மதிப்பு கோடி.
 
53.   சென்னை மாதவரம் பால்பண்ணைஆர்.சி.மேத்தா ஃப்ளாட்ஸில்காந்தி அழகிரி பெயரில் அடுக்கு மாடி வீடு. மதிப்பு கோடி.
 
54.   சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் தயாநிதி அழகிரி பெயரில் 50 சென்ட் பண்ணை வீடு மதிப்பு 2கோடி.
 
55.   மதுரை மாவட்டம்சிவரக்கோட்டையில் தயா பொறியியல் கல்லூரி.
 
56.   மதுரை மாட்டுத் தாவணிஅருகே கிரவுண்ட் நிலத்தில் தயா சைபர் பார்க் (மாடி கட்டிடம்) மதிப்பு 50 கோடி.
 
57.   மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் தயா டயாக்னாஸ்டிக்ஸ் மதிப்பு கோடி.
 
58.    சென்னைஅண்ணா சாலைகதவு எண் 271-A என்ற முகவரியில் கோடி மதிப்பில் கனிமொழி பெயரில் வணிக வளாகம்.
 
59.   வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் கனிமொழியின் பங்கு ரூ.20 கோடி.
 
60.   கலைஞர் டிவியில் கனிமொழியின் பங்குகுறைந்த பட்சம் 30 கோடி.
 
61.   ஊட்டியில் 525 ஏக்கர் வின்ட்ஸர் எஸ்டேட். மதிப்பு 50 கோடி.
 
உறுதி செய்யப் படாத சொத்துக்கள் 
 
62.    அந்தமானில் 400 ஏக்கர் நிலம்.
 
63.   கூர்க் பகுதியில் காபித் தோட்டம். 
 
64.   தமிழகம் முழுக்க மல்ட்டிப்ளெக்ஸ் திரையரங்குகள் கட்டத் திட்டம்.
65.   எஸ்டி கொரியர் (மாறன் சகோதரர்கள்) இதற்கு சொந்தமாக விமானங்கள்.
 
66.   மாறனின் மகள் அன்புக்கரசிக்காக சன் மெடிக்கல் காலேஜ் மற்றும் மருத்துவமனைமற்றும் தமிழ்நாடு ஹாஸ்பிட்டல்ஸ்.
 
67.   சாய்பாபாவோடு ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் அண்ணா அறிவாலயம் அருகே கட்டப்பட்டு வரும் அப்பாட்ஸ்பரி வளாகம்மருத்துவமனையாக மாற்றப் பட்டுமாறன் சகோதரர்களிடம் ஒப்படைக்கப் படும்.
 
68.   கோயம்பத்தூர்ப்ரூக்பாண்ட் சாலைப்ரூக்ஃபீல்ட்ஸில் உள்ள ஆர்எம்கேவி ஜவுளிக் கடை இருக்கும் நிலம்கனிமொழிக்குச் சொந்தமானது என்று கூறப்படுகிறது.
 
இது முழுமையான பட்டியல் அல்ல.   இவை வெறும் அசையா சொத்துக்கள். வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்புப் பணம் இதில் சேர்க்கப் படவில்லை.  
  


சச்சினின் கார்

எத்தனையோ கார், பரிசாக கிடைத்த காரை விற்று விட்டார்.  ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள்.  அவரவர் ஒவ்வொரு கருத்தை வைக்கிறார்கள்

மகாத்மாவின் பேரன் துசார் சொல்கிறார், 9 ஆண்டுகளுக்கு முன் கார் பரிசாக கிடைத்த போது ரூ.1.13 கோடி வரி விலக்கு கேட்டார்.  அரசும் அளித்தது.

இப்போது ரூ,1.20 கோடி விற்று இருப்பார். இதன் லாபத்திற்கான வரிக்கு அரசிடம் விலக்கு கேட்பாரா அல்லது செலுத்துவாரா-?

பரிசை விற்கலாமா?  அன்பளிப்பாக கொடுத்திருக்கலாம்

மக்களே நீங்கள் சொல்லுங்கள்

அரசு வரிவிலக்கை திரும்ப பெற்றுக் கொள்வதுதானே முறை

இருப்பவர்தானே செலுத்தட்டும் வரியை

இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...