பங்கு சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பங்கு சந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 5

அதானி இந்தியா









ஊதிப் பெருக்கிய
உலகப் பணக்காரனை
உருட்டித் தள்ளியது
ஹிண்டன்பர்க் ஆய்வு

ஆய்வொரு குப்பையென
அவர்கள் குதித்தே – இது
இந்தியாவின் மீதான
வளர்ச்சிக்குத் தாக்குதல் என்றனர்

ஊக வணிக வீழ்ச்சியில்
ஊமையானது அரசு
ஊதிப் பெருக்காத எதிர்கட்சியோடு
ஊடகமும் மௌனமானது

இந்தியாவும் அதானியும்
இணையென்ற கூற்றை
இறையாண்மை இந்தியா
ஏற்றுக் கொண்டதா?

இரண்டு இந்தியா
ஏற்றுக் கொண்ட மக்கள்
தேச பக்திக் கொண்டவர்கள்
ஏற்காதவர்கள் ????............

அதானி அம்பானி
ஆளும் இந்தியாவில்
ஆநிரையோ அந்நியரோ
ஆமைக்கறி உண்பவரோ

எட்டு இலட்சம் கோடி
எங்குச் சென்றதென
எல்லோரும் தேடிக் கொண்டிருக்கையில்
“எல். ஐ. சி” யும், “எஸ். பி. ஐ” யும் வந்தனர்


வீழ்ந்தாலும் பாதிப்பில்லை
வீரவசன அறிக்கயை
வீசி எறிந்தனர் – ஊடகங்கள்
பிரசுரித்து ஆசுவாசப் படுத்தின

ஆண்டிறுதி விற்பனை
அதோகதி யானது எல்.ஐ.சி க்கு
அவர்களின் பங்கும்
அடிப்பட்டு வீழ்ந்தது

கருப்புப் பணத்தை ஓழித்து
பலகோடி இலாபமீட்டி
சில நாட்களில்
உலகில் 2வது நபர்

மொரிசியஸ், பனமா
கேமன் தீவுகளில் தேடிய
அதானியின் இந்தியாவா
55 சதவீதத்தை தொலைத்தது

வங்கிக் கடன், எல்.ஐ.சி முதலீடு
அடமானப் பத்திரங்கள்
45 சத வீதமாய் மிஞ்சுமா
நாமம் மட்டுமே எஞ்சுமா

நீரவ் மோடி
மல்லையாக்களின்
வரிசையின் எண்ணிக்கை
வரும் நாளில் தெரியுமோ

உலகம் சுற்றும் வாலிபனின்
உன்னதப் பயணங்கள்
உத்தமர் தேசத்தின்
உத்திரவாதமெனப் பொழிய

சந்தைதனை போட்டியின்றி
சகலமும் பெற்றவன்
சந்திச் சிரித்து நிற்கிறான்
சகாயனோ விக்கித்துப் போகிறான்

ஏவல் செய்யும்
அரசு யந்திரங்கள்
காவல் காக்கின்றன
கண்ணியம் காக்கப்படுகிறது

வீட்டுக் கடனுக்கு
வீடு ஜப்தி செய்யலாம்
ஜி.எஸ்,டி யால் மூடிய
சிறுநிறுவனங்களை ஏலம் விடலாம்

கொரானாவில் பரலோகம் சென்ற
பாமரனின் குடும்பத்தை
சட்டப்படி ஏலம் விட்டு
நிற்கதியாய் நடுத் தெருவில் நிறுத்தும்

வங்கி நடைமுறை
இந்தியர்களுக்கு மட்டுமே – ஆயினும்
அதானி இந்தியா
மேதினியில் வேறுதானே?

“இசட்” பிரிவு பாதுகாப்பில்
“செபி” யோ “சி.பி.ஐ “ யோ
உள் நுழைய முடியவில்லை
வங்கிகள் மூச்சு விடவில்லை

நீதி மன்றங்கள்
நிவாரணம் அளிக்குமோ
கடந்துச் செல்ல அவையும்
பழகிக் கொண்டனவோ

அமெரிக்க நீதிமன்றம் வா
ஆதாரம் தருகிறேன் என்கிறான்
ஆத்திரமோ, அவசரமோ இல்லை
அமைதிக் காக்கிறான்

தேசப் பக்தியால்
“ஆன்டி” இந்தியனாகாது
இருக்க பழகுவாயா?
எதிர்வினை யாற்றுவாயா?





சனி, மார்ச் 14

கரோனா பங்கு






15 இலட்சம் கோடிகள்
பங்கு சந்தையில் இழப்பு
கரடி கொண்டு போனதோ
மாடால் மீட்க முடியாதோ

ஊதிப் பெருக்கிய
ஊக வணிகத்தில்
யாருடைய பணம்
எங்கே போனது

இரத்த வெள்ளமென
பரிசுத்த பத்திரிகைகள்
பாடம் போதிக்க
பாவம் மக்கள்

காரணங்கள்
கரோனா வைரஸ்
யெஸ் வங்கி திவால்
அரசும் பத்திரிக்கையும் வாந்தியெடுத்தவை

ஆசிய பணக்காரன் ஜாக்-மா
அம்பானியின் பட்டத்தை பறிக்க
கரோனா காரணமா
கார்ப்பரேட் ஊழல் நாடகமா

வீழ்ந்த பொருளாதாரத்தின்
நீட்சி இதுவென்றும்
வேலைவாய்ப்பு முடங்கியதின்
தொடர்ச்சி என கொள்ளடா

பங்கு ஈவுக்கு
ஏங்கி கிடப்பவர்களே
ஏப்ரலில் ஏமாற - இதுவொரு
முன்னோட்டமென புரிந்து கொள்ளடா

புதன், ஆகஸ்ட் 22

கணக்கு

வணிக நிறுவனங்கள் ஆண்டு அறிக்கை சமர்ப்பிக்கும் போது ஒரு பக்கம்  நன்மதிப்பு (Goodwill) என்று காண்பிப்பார்கள்.  இத்தனை ஆண்டு அவர்கள் நடத்திய தொடர் வணிகத்தால் ஏற்பட்ட நன்மதிப்பு என்பது கணக்கு.

அதற்கு என்ன?

தற்போது தங்களின் குடும்ப பெயர் பயன்படுத்துவதால் ஏற்பட்ட நன்மதிப்பிற்கு இலாபத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை அதாவது சதவிகிதத்தில் 0.5%   அல்லது அதற்கு குறைவாக எடுத்துக் கொள்கிறார்கள்.

இந்த பழக்கம் 90 களின் ஆரம்பத்தில் டாடா/கோத்ரேஜ் நிறுவனங்கள் ஆரம்பித்து வைத்ததாம் இந்திய பெருமுதலாளிகளின் சார்பாக

ஏன்?

மிகப்பெரிய குழுமம் ஒரு துணை நிறுவனம் ஆரம்பிக்கும் போது குழுமத்தின் பிரதான பெயரை இணைத்தோ அல்லது அக்குழுமத்தின் துணை நிறுவனம் என்றோ ஆரம்பிப்பதால் ஏற்படும் நன்மதிபிற்கு
புதிய நிறுவனம் இத்தொகையை பிரதான முதலீட்டாருக்கு கொடுக்க வேண்டும்.

நிறுவன விதிகள் என்ன சொல்கிறது?

ஒரு அசாதாரண பொதுக் கூட்டம் நடத்தி அதில் 75%  வாக்குகள் பெற்றால் இது சாத்தியமாகும்.  ஆனால் இது போன்ற நிறுவனங்கள் 75% பங்குகளை தாங்களும் தாங்கள் சார்ந்த நிறுவனங்களும் வைத்திருப்பதால் இது ஒன்றும் பெரிய வேலையில்லை.  

எதற்கு இந்த கதை

சமீபத்தில் பிரிட்டானிய பிஸ்கட் நிறுவனம் நடத்தி வரும் நுஸ்லி வாடியா தனக்கும் தன் குடும்பத்திற்கும் இதுபோன்று ஒரு லாபம் வேண்டும் என கூறுகிறார்

யார் இந்த நுஸ்லி வாடியா

பாம்பே டையிங், கோ ஏர் போன்ற நிறுவனங்களின் முதலாளி, இந்திரா காந்தியிடம் ஏற்பட்ட சிறு பிரச்சனையால் ரிலையன்ஸ் என்னும் மிகப் பெரிய சாம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்தவர்.

இந்த ஆண்டு இலாபம்

The key listed firms of the group are biscuit maker Britannia Industries Ltd, plantations company Bombay Burmah Trading Corp. Ltd, textile manufacturer Bombay Dyeing and Manufacturing Co. and chemical producer National Peroxide Ltd, which together earned Rs. 13,772 crore in revenue in fiscal 2012.

இந்த வருமானத்தில் 0.25%  வேண்டுமென்பது தீர்மானம்

இவர்கள் மட்டும்தானா இந்த ஓட்டத்தில்

அட நம்ம ஊர் ஸ்ரீராம் குழுமத்தின் தியாகராஜன் இதேபோல் வேண்டுகிறார்.  முத்தூட் நிறுவனத்தின் முதலாளி தான் 50% மேற்பட்ட பங்குகளை வைத்திருக்கும் வரை நன்மதிப்பாய் ஒரு வருவாய் வேண்டுமென்கிறார்.

ஏன் கூடாதா

அவர்கள் நிறுவனம், அவர்கள் இலாபம் ஏன் கூடாதா என்கிறீர்களா.  ஆம் கூடாது.  நட்சத்திர பங்குகள் என்று சிறு முதலீட்டாளர்கள் இதில்தான் முதலீடு செய்துள்ளனர்.   அவர்களுக்கு கிடைக்கும் வருவாயில் இந்த பெருமுதலாளிகள் கை வைக்கின்றனர்

எனவே கூடாது என்பது என் வாதம்

நீங்கள் சொல்லுங்கள் மக்களே
----------------------------------------------------------------------------------------------------------------------------------

சகபதிவர் ஒருவர் எனக்கு பட்டம் வழங்கியுள்ளர்.  என்ன பட்டம்   http://thmalathi.blogspot.in/2012/08/blog-post_19.html என்பதை இங்கு சென்று காணுங்கள்.  பட்டத்திற்கு வாழ்த்துக்களும் குவிந்திருக்கின்றன.  காரணத்தை அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.


வியாழன், மார்ச் 1

ஆப்பிள்

இந்நிறுவனம் தன் முதலீட்டாளர்களை மகிழ்விப்பதற்காகவும், புதிய முதலீட்டாளர்களை கவர்வதற்காகவும் பங்கு ஒன்றிக்கு 2 அமெரிக்க டாலர் காலாண்டு ஈவுத்தொகையாக தர திட்டமிட்டு இருப்பதாக the economic times  நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது,

இந்நிறுவனம் 97.6 பில்லியன் அமெரிக்க டாலர் ரொக்க லாபமாக பெற்றிருக்க அதில் ஆண்டுக்கு 7.46 பில்லியன் அமெரிக்க டாலரை ஈவுத் தொகையாக கொடுக்க திட்டமிட்டுருக்கிறது.

 100 பில்லியனில் 7.5%  கொடுத்துவிட்டு மீதம் என்ன செய்யப்போகிறார்கள்

ஆனால் அது எப்படி அத்தொகையை சம்பாதித்தது என தோழர் கலையரசன் அவர் தளத்தில் மிக அருமையாக விளக்கியுள்ளார் சென்று பாருங்கள்

ஆப்பிள் லாபம் பார்க்கும் வழி


திங்கள், அக்டோபர் 17

உலகம் விழிக்கிறதோ?

அமெரிக்காவில் டைம் ஸ்கொயரில் மக்கள் திரள், ஐரோப்பாவில், ஆசியாவில் என மக்கள் அங்காங்கே திரள்கிறார்கள்.  ஆம் இருப்பவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளி நீண்டு கொண்டிருக்கிறது என்பதற்காக.

காரணம் கண்டு பிடித்து விட்டார்கள் மக்கள். முதலாளித்துவத்தின் பேராசை.
ஆனால் சரியான தலைமையில்லை வழி நடத்த.  தள்ளுமுள்ளுவோடு முடிந்து விடும் போல் உள்ளது இந்த போராட்டம்.

பங்கு சந்தைகள்தான் காரணம், பணத்தை இழப்பதற்கு என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.   அதனால்தான் அதைச் சுற்றி போராட்டம்.  ஆம் சும்மா இருந்து சம்பாதிக்க ஆசைப்பட்டால், ஏமாற்ற ஆட்கள் கிளம்பி விடுகிறார்கள்.

எனினும் பேராசை விடப் போவதில்லை.  போராட்டம் ஓய்யபோவதில்லை

வியாழன், செப்டம்பர் 29

புதியதாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் திவால்

கடந்த ஆகஸ்ட் 2011 ல் பங்கு சந்தையில் பட்டிலிடப்பட் நிறுவனங்களின் பங்கு மதிப்பு 3/4 வீழ்ச்சியடைந்து சிறு முதலீளிட்டார்களை திவாலாக்கியுள்ளது.

ஐபிஓ எனப்படும் (initial public offer) மூலம் நிறுவனங்கள் பொதுமக்களிடம் நிதி திரட்டுகின்றன.  முன்பெல்லாம் ரூ.100 கோடி முதல் ரூ.1000 கோடி கடன் என்றால் IDBI, IFCI, IIB, ICICI,UTI, LIC, HUDCO,TDB இப்படிப்பட்ட நிறுவனங்களிடம் கடன் பெற்று வந்த நிறுவனங்கள்,  தற்போது அதாவது புதிய பொருளாதார கொள்கை அமலுக்கு வந்தவுடன், IPO மூலம் நிதி திரட்ட ஆரம்பித்தனர்.

மேற்கண்ட நிறுவனங்களில் கடன் பெற வேண்டுமானால், ஆயிரதெட்டு ஆவணங்கள், ஈட்டுறுதியாக அசையா சொத்துக்கள், தனிப்பட்ட ஈட்டுறுதி ஆகியவகளை அளிக்க வேண்டும்.   இவைகளிலிருந்து தப்பிக்கதான் இந்த IPO.

பங்கு சந்தையில் நேரடியாக இறங்க முடியுமா என்றால் அதற்கும் ஆயிரதெட்டு நடைமுறைகள்.   வட்டியில்லா கடன் என்பதால் அதை பின்பற்ற தயங்குவதில்லை நிறுவனங்கள்.  முதலீட்டாளனை பொறுத்தவரை சரியில்லை என்றால் நட்டத்திலும் விற்று விட்டு சென்று விடுவான். கேள்வி கேட்க ஆள்ளில்லை.

பங்கு மதிப்பை நிர்ணயம் செய்யும் நிறுவனங்கள் வேண்டுமென்றே அதிகமாக, பொய்யாக இட்டுகட்டி நிர்ணயம் செய்கின்றன.  பங்கு வெளியீடு பட்டியலிடப்பட்ட நான்கைந்து நாட்களுக்குள் நிறுவனங்கள் தன் பங்கில் சிலபகுதியை விற்று ரூ.1970 கோடி பார்த்துள்ளனர்.

பார்த்தீர்களா இவர்களுடைய நோக்கத்தை, நிதி திரட்டுவது என்பது நிறுவனத்தை நடத்த அல்ல.  சிறு முதலீட்டாளர்களை கொள்ளையடிக்க

இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் முடிய ரூ.5947 கோடி37 வெளியீடுகள் மூலம் திரட்டப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 35 வெளியீடுகள் மூலம் ரூ.12606 கோடி திரட்டப்பட்டது. தற்போது வெளியான 7 வெளியீடுகள் தன்மதிப்பில் 50%  மேல் இழந்து விட்டது.

அப்படிதான் நடந்துள்ளது தற்போது பங்கு வெளியிட்ட கீழ்கண்டுள்ள நிறுவனங்களின் நிலை.


ஏமாறுபவன் இருக்கும் போது ஏமாற்றிக் கொண்டிருப்பவன் புது உத்திகளை கண்டு பிடிப்பான்.  உடனடி பணக்காரன் ஆக நினைப்பவன் உள்ளதையும் இழப்பான், உயரவும் பறப்பான்


           

செவ்வாய், ஜூலை 26

2800 நிறுவனங்கள் காணவில்லை

கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 2800 நிறுவனங்கள்  காணவில்லை.  ஆயினும் புதியதாக 786 நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பட்டியலிடப்பட்டுள்ளது.

பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளைதான் நீங்கள் வாங்கவோ விற்கவோ முடியும்.    மேற்கண்ட 2800 நிறுவனங்களின் பங்குகளை நீங்கள் வைத்திருந்தால் தற்போது எதற்கும் உதவாது.   உதாரணம் DSQ Software, Pentafour, Pryamid Saimira,

இவர்கள் பங்கு சந்தையில் பட்டியலிட்டு நுழைந்தபோது அதிக அளவு வரவேற்பு இருந்தது.   அவர்கள் தேவைக்கு அதிகமாக அதாவது 2 அ 3 மடங்கு தொகை வசூலானது.  இப்போது சீந்துவாரில்லை.

ஏறக்குறைய 1640 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன இதில் 876 நிறுவனங்கள் கட்டாயமாக பங்கு சந்தை பட்டியலிருந்து நீக்கப்பட்டிருக்கின்றன.  பங்கு வர்த்தகம் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் 1196.

compulsory delisted companies are Femnor Minerals, Lloyd Cements, Western Paques and CRB Capital.


பங்கு வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் நிறுவனமான செபி மேற்கண்ட நிறுவனங்களை கட்டாயமாக பட்டியிலிருந்து நீக்குகிறது.   அதற்கு ஆயிரம் காரணங்கள் கேட்டு அவை திருப்தி அளிக்காத பட்சத்தில்தான் இந் நடவடிக்கை


கட்டாய நீக்கம் ஏற்பட்டால் முதலீட்டாளகளிடமிருந்து பங்குகளை வெளியீட்டாளர் நிறுவனத்தார்  திரும்ப பெற்றுக் கொள்ள வேண்டும் பங்குதாரர் விரும்பும் பட்சத்தில்.


சரி இதெல்லாம் சட்டம், செபி, ஏற்கனவே செய்திதாளில் வந்தவை
ஏன் என்று கேள்வி கேளுங்கள்?  நிறைய விஷயங்கள் உள்ளன


நிறுவனங்கள் ஏன் பங்கு சந்தைக்கு வருகின்றன?
ஏன் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன?
செபி என்ன செய்து வருகிறது?
பங்குதாரருக்கு இழப்பீடு ஏற்பட்டால் செபி உதவுமா?




நிறுவனங்கள் முன்பெல்லாம் பொதுமக்கள் பணத்தை வங்கிகள் மூலம் கொள்ளையடித்தன.  அதில் ஏகப்பட்ட சிக்கல்கள்.  மாதந்தோறும் வட்டி,  இருப்பு கணக்கு, நீதிமன்றம் மற்றும் ஆயிரத்தெட்டு ஆவணங்கள் சமர்ப்பித்தல், நிறுவனத்தை மூடிய பிறகும்.  அதிலிருந்து மீள கண்டுபிடித்த வழிதான்


பங்கு சந்தையில் நிதி திரட்டுதல், Initial Public Offer (IPO) Rights Issue  போன்றவை.


இங்கே பங்கு விலை நிர்ணயம் என்பது அவர்களின் சொத்து மதிப்பை பொறுத்து மட்டுமல்ல, அரசியல் தொடர்பு, பொதுமக்கள் மத்தியில் அந்நிறுவனத்தின் நன்மதிப்பு,  செயல்பாடு, கையிலுள்ள ஆர்டர்கள் மற்றும் பல காரணங்களை கொண்டு மதிப்பிடப்படுகிறது


ஆனால் பாதகங்கள் பற்றி ஒரிரு வரியோடு முடித்துக் கொள்கிறார்கள்.


ஆண்டுக்கொரு முறை டிவிடண்டு கொடுத்தால் போதும்,  ஆனால் நிறுவனங்கள் பெரும்பாலும் கொடுப்பதில்லை.   கொடுப்பதற்கு ஏதுமில்லை.  அல்லது மனமில்லை.  இரண்டு மூன்று ஆண்டுகளில் நிறுவனமே இருப்பதில்லை கொள்ளையடித்த 200 கோடியானாலும் 5000 கோடியானாலும்  ஏமாந்தது பொதுஜனம்.  எந்த நிறுவனம் தண்டனை பெற்றிருக்கிறது பங்கு சந்தையில் ஏமாற்றி


இதே 200 கோடி வங்கியில் கடன் வாங்க வேண்டுமென்றால் எத்தனை ஆவணங்கள் கொடுக்க வேண்டும்.   வட்டி கட்ட வேண்டும்,  அடமானமாக சொத்து வேறு தர வேண்டும்.  தன் பொறுப்பு காப்புறுதி தர வேண்டும்.  இதன் மூலம் அவர்களின் சொந்த சொந்துகளை நீதிமன்றம் மூலம் ஏலமிடலாம்  ஆனால் பங்கு சந்தையில் இவை ஏதுமில்லை.   செபிக்கு மட்டும் சில தகவல்கள் தர வேண்டும்.  அதை கொடுக்க முடியாமலே சில நிறுவனங்கள் காணாமல் போயிருக்கின்றன.


ஒருநிறுவனத்தை மூடிவிட்டு அடுத்த நிறுவனம்மூலம் பினாமி பெயரில் மீண்டும் பங்கு சந்தையில் நிதி திரட்ட புறப்பட்டுவிடுவான் முதலாளி,  மறுபடியும் ஏமாற தயாராக இருப்பான் முதலீட்டாளன்


இதிலிருந்து தப்பிக்க என்ன வழி முதலாளிக்கு ஆயிரம் வழி, சிறு முதலீட்டாளருக்கு பட்டை நாமம்





இது அரசியல்தான்

  தாமரை நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கைகள் சலனமற்று இருக்கிறது இலைகள் உதிர்ந்து கொண்டிருக்க திடீரென விசில் சத்தங்கள் கதிர் அரிவாள் சுத்தியல் ...