தானம்
கன்னிகாதானம்
காலம் காலமாய்
கைத்தலம் பற்றிட
தானம் கொடுக்க
மங்கையென்ன
மாடா, பொருளா
மானுடம்தானே
இணையாய் வாழ
இல்லறம் பேண
இருவரில்
யார் – யாருக்கு அடிமை
மரபென
மாறாது செய்தப் பெற்றோரை
மாற்றும் வல்லமை
மங்கையர்கே உண்டு
கற்றக் கல்வியால்
பகுத்துணர் அறிவால்
மரபுகளை மறுத்து – என்றென்றும்
மகளாக இருக்க வேண்டுமென்கிறாள்
ஆண்டாண்டுக் கால
அடிமைதனை
ஆட்சியர் பணிக் கல்வி
அகற்ற
வேதம் உரைத்ததை
வேண்டாம் என்பது
சனாதனத் தேசத்தில்
விடிவெள்ளிதான்
கலகம் பிறந்தது
கணவனும் ஏற்றான்
கற்றவர் பெருக
கற்கால மடமை மாறுமே
திங்கள், டிசம்பர் 20
கன்னிகாதானம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சூட்சமம்
காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...
-
வளமிக்க வாழ்வில் வசந்தத்தைக் கூட்டவும் தளரும் பருவத்தில் தண்டம் தவிர்க்கவும் இளமையை நீட்டித்து இனியதாய் மாற்றவும் களமிறங்கு காலத்தே காத்தி...
-
சங்கிகளுக்கு சளைத்தவர்களில்லை என பழனியில் பட்டம் பெற்றவர்கள் பதவிகாலம் முடிவடைவதால் பதினாறு ஆண்டுகள் கழித்து பக்தக் கோடிகளை பரவசப் படுத்தப் ...
-
காதல் சொல்ல வந்தேன் காதுக் கொடுக்க மறுப்பதேன் வாதம் செய்து வதைப்பது வாகைச் சூடி மகிழவா மோத லென்றும் தொடர்வது மோகம் கொண்டக் காரணமா மாதம் மும்...
-
நோக்கும் கண்களால் நோயைத் தந்தாய் நீக்கும் மருத்துவம் நீயேதான் என்றாய் தூக்கம் கெடுத்து துவளச் செய்தாய் தாக்கும் நினைவுகளால் தவிக்கவ...
-
இறுதி வாய்ப்பை பயன்படுத்தவில்லை என்றால் தேர்ச்சிப் பெற முடியாத தேர்வு முற்றுப் பெறும் பரவாயில்லை .... வெற்றிப் பெறும் பாடத்தில் பயிற்சி எடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக