தானம்
கன்னிகாதானம்
காலம் காலமாய்
கைத்தலம் பற்றிட
தானம் கொடுக்க
மங்கையென்ன
மாடா, பொருளா
மானுடம்தானே
இணையாய் வாழ
இல்லறம் பேண
இருவரில்
யார் – யாருக்கு அடிமை
மரபென
மாறாது செய்தப் பெற்றோரை
மாற்றும் வல்லமை
மங்கையர்கே உண்டு
கற்றக் கல்வியால்
பகுத்துணர் அறிவால்
மரபுகளை மறுத்து – என்றென்றும்
மகளாக இருக்க வேண்டுமென்கிறாள்
ஆண்டாண்டுக் கால
அடிமைதனை
ஆட்சியர் பணிக் கல்வி
அகற்ற
வேதம் உரைத்ததை
வேண்டாம் என்பது
சனாதனத் தேசத்தில்
விடிவெள்ளிதான்
கலகம் பிறந்தது
கணவனும் ஏற்றான்
கற்றவர் பெருக
கற்கால மடமை மாறுமே
திங்கள், டிசம்பர் 20
கன்னிகாதானம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கல்நெஞ்சுக்காரி
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...
-
எனக்கு மாற்றென யாரைத் தேடுகிறாய் ? வனப்பு குறைவென்றா வடிகட்டப் பார்க்கிறாய் ? முன்பின் பழகாமல் முந்தானையில் முடிச்சிட்டால் , முதல் நா...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
15 வயது முஸ்லீம் பெண் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டார். உயர் நீதி மன்றம் சொல்கிறது இந்து பெண் 18வயதுக்கு குறைவாக திருமணம் செய்த...
-
பனையளவு உயரமும், பார்த்தாலே பரவசமும், பகட்டுச் சொற்களும் பாவையெனை கவராது. பிரமிக்க வைக்கும் பரிசுப் பொருளோ, விலையுயர்ந்த அணிகலனோ விளைவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக