சனி, செப்டம்பர் 24
இலவசம்
வாக்குறுதியை வாரியிரைத்து
வாக்குச் சாவடியைக் கைப்பற்றி
வாகனப் படையோடு
வலம் வருபவனுக்கு
ஆட்சி அதிகாரம்
அத்தாட்சி பத்திரமா
ஆள்பவர் முடிதரித்ததும்
ஆலகால மாவதா
மறைமுக வரியாய்
மனிதனிடம் வசூலித்ததை
மானுடச் சமூகத்திற்கு
மடை மாற்றுவதா
அறுதிப் பெரும்பான்மை
அரசியல் கட்சிக்கில்லையெனில்
மக்கள் பிரதிகள் மொத்தமாய்
பச்சோந்தியாய் மாறுவதா
திறைச் செலுத்தும்
திடீர் பெருமுதலாளிகளுக்கு
வரியின் வரையறை
சரியில்லை எனக் குறைப்பதா
சமச்சீரற்ற சமூகத்தில்
சரிச்சமாய் உயர்ந்திட
பொருளாதாரத்தில் வீழ்ந்த
உயர்சாதிக்கு இடஒதுக்கீடு அளிப்பதா
அன்றாடங்காச்சி
ஐந்துக்கும் பத்துக்கும்
அன்றாடம் உழைத்தும்
அதோகதியாய் நிற்பதா
அதானி அம்பானியின்
5 இலட்சம் கோடி
10 இலட்சம் கோடியாய்
ஓராண்டில் மாறுவதா?
கணக்கு வழக்கு
பிரதம நிதிக்கா
உனக்கு தேவையில்லாதது என
உரக்க சொல்வதா
நிதியை நிர்வகிக்க
பதியாய் வந்தவர்கள்
குதியாய் குதிக்கறார்கள்
பணம் அவர்களுடையதாம்
ஆதாரை இணை - எரிவாயு
மான்யம் கிடைக்குமென்றார்கள்
விட்டுக்கொடு என்றார்கள்
விலையேற்றமே கண்டோம்
ரோட்டோரக் காய்கறிக் கடையும்
டிஜிட்டிலில் பளபளப்பதாய்
பே – ட்டி - எம், போன் பே யும்
பேட்டி அளிக்கின்றன
இரண்டு சட்டைக்கு
ஒரு சட்டை இலவசம் - இது
வியாபாரத் தந்திரம்
வீழ்வது விட்டில்கள்
குடிக் காப்பது
அரசின் கடமை
குடிக்கக் கொடுத்து
வருவாய் பெருக்குவது
வரி வசூலை
பிரித்தளிப்பது உன்வேலை
தரித்திரனாய் மக்களை
பிரித்து வைத்திருப்பதோ
சுகாதாரமாய் வாழ
மருத்துவ வசதி
சுயமரியாதையோடு வாழ
யாரிடமும் கையேந்தாமல்
ஒண்டக் குடிசையும்
கற்கக் கல்வியும்
உழைக்க வேலையும்
ஒவ்வொருக்கும் இருந்தால்
தாலிக்குத் தங்கம்தான் கேட்போமா
தமிழகம் அரசிடம்
காட்டில் ஒரு வீடுதான் கேட்போமா
ஒன்றிய ஆட்சியிடம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அகலிகை
அகலிகை, சீதை, திரௌபதி, தாரை, மண்டோதரி - பஞ்ச கன்னியரென மகாபாரதம் உரைக்க அவர்களில் அகலிகை கௌதம ரிஷியின் மனைக் கிழத்தி வால்மீகி, கம்பன், ...
-
அகலிகை, சீதை, திரௌபதி, தாரை, மண்டோதரி - பஞ்ச கன்னியரென மகாபாரதம் உரைக்க அவர்களில் அகலிகை கௌதம ரிஷியின் மனைக் கிழத்தி வால்மீகி, கம்பன், ...
-
கடுப்பில் ஏனடி கண்ணனை வாட்டுற வடுக்களாய் வார்த்தையை வண்டியாய் கொட்டுற தடுத்தே அன்பின் தரத்தைச சோதிக்கற அடுகள மல்லவே அன்புனை எதிர்த்திட ஒருந...
-
தூற்றலை மறந்து தூயவளை நினைக்க வேற்றலம் தீண்டிட வேடிக்கை ஏனடி மாற்றம் நிகழுமடி மற்போரில் அல்ல ஏற்றத்தில் உரைப்பேன் என்தேவி நீயே ம...
-
தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா தேவையை அதிலேச் சொல்லவா வான்புகழ் வள்ளுவன் வழியே வண்டமிழில் நின்புகழ் இசைக்கவா ஏனென்றுக் கேள்வி கேட்காதே ...
-
காதலிப்போர் கண்ணோடு கண் காணும் நாளா பிப்ரவரி 14 வேதத்தை மீட்டெடுக்க வாஞ்சையோடு பசுவைக் கட்டியணைக்க பிப்ரவரி பதினாங்கா காமதேனு என கட்டிப் பிட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக