திங்கள், அக்டோபர் 24
தீபாவளி
புராணமோ
புனைந்தக் கதையோ
பொய்களின் மூட்டையோ
பொறுமையாய் கேளுங்கள்
வராக அவதாரத்தில்
பூமாத் தேவியை
தொட்டதால்
பவுமன் பிறக்கிறான்
அரக்கர்களை வென்ற கையோடு
அவளைத் தொட்டதால்
அவதாரத் பிறப்பிற்கு
அரக்க குணமாம்
குணத்தால்
அரக்கனென அழைத்ததால்
அவனுக்கொன்றும்
அச்சமில்லை
பிரம்மனிடம் -சகா
வரம் கேட்க
திருத்தி அளிக்கப்படுகிறது
ஈன்றவளால் இறுதி முடிவென
வராக அவதாரத்தில்
வசதியாய் தொட்டது
கிருஷ்ன அவதாரத்தில்
சத்யபாமாவால் சரிசெய்யப் பட்டது
தனயனென அறியாது
தன்னிணை காக்க
அசுரனை அழித்தாள்
தேவர்களை காத்தாள்
கதை முடிந்ததென
கடுகளவும் நினையாதீர்
கற்பனைகள் தொடரும்
காசியும் இராமேஸ்வரமும் இணையும்
திரேத யுக நாயகன்
திரும்புகிறார் கானக வாழ்விலிருந்து
தீபமேற்றி மகிழ்ந்தனராம் – மக்கள்
தீப ஓளி கதைகள்
2500 ஆண்டுகளுக்கு முன்
ஆணும் பெண்ணும் சமம்
அகிம்சை வாய்மையென்றும்
பற்றற்றிறு பாலுணர்வு துறவென்றும்
வடித்துக் கொடுத்த வர்த்தமானர்
வீடு பேறடைந்த நாளை
தீபமேற்றி வணங்கியதால்
திருநாள் அவர்களுக்கு
போதிமர ஞானம் போதும்
நாடாள வாவென்று - சுத்தோதனன்
நாலுபேரை அனுப்ப
நால்வரும் ஞானம் பெற
காலோதயன் எனும் அமைச்சன்
கபிலவஸ்துவுக்கு
சித்தார்த்தனை
அழைத்து வர
வறியவரும் தீபமேற்றி
வாழ்த்தட்டுமென்று
இருப்பவன் கொடுத்தான்
இருள் விலக மகிழ்ந்தான்
புத்தனின் வருகை
புத்தொளி அளித்ததால் – நாடு
திரும்பிய நன்நாளை
தீபஒளியேற்றிக் கொண்டாடுகின்றனர்
1577 ஓர் அடிக்கல் நட்டு
பொற்கோயிலை கட்டத் துவங்கினர்
அந்நாளை சீக்கீயர்கள்
தீபமேற்றிக் கொண்டாடுகின்றனர்
சக்தி சிவனோடு இணைந்து
அர்த்தநாரியாய்
காட்சி அளித்த நாள்
கேதார கௌரி விரதநாள்
மனிதனின் விழாவா
மதங்களின் விழாவா
மானுட வாழ்வில்
மகிழ்ச்சியுறு நாளா???? !!!!!!!!!!!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அகலிகை
அகலிகை, சீதை, திரௌபதி, தாரை, மண்டோதரி - பஞ்ச கன்னியரென மகாபாரதம் உரைக்க அவர்களில் அகலிகை கௌதம ரிஷியின் மனைக் கிழத்தி வால்மீகி, கம்பன், ...
-
அகலிகை, சீதை, திரௌபதி, தாரை, மண்டோதரி - பஞ்ச கன்னியரென மகாபாரதம் உரைக்க அவர்களில் அகலிகை கௌதம ரிஷியின் மனைக் கிழத்தி வால்மீகி, கம்பன், ...
-
கடுப்பில் ஏனடி கண்ணனை வாட்டுற வடுக்களாய் வார்த்தையை வண்டியாய் கொட்டுற தடுத்தே அன்பின் தரத்தைச சோதிக்கற அடுகள மல்லவே அன்புனை எதிர்த்திட ஒருந...
-
தூற்றலை மறந்து தூயவளை நினைக்க வேற்றலம் தீண்டிட வேடிக்கை ஏனடி மாற்றம் நிகழுமடி மற்போரில் அல்ல ஏற்றத்தில் உரைப்பேன் என்தேவி நீயே ம...
-
தேன்தமிழ் சொல்லெடுத்துப் பாடவா தேவையை அதிலேச் சொல்லவா வான்புகழ் வள்ளுவன் வழியே வண்டமிழில் நின்புகழ் இசைக்கவா ஏனென்றுக் கேள்வி கேட்காதே ...
-
காதலிப்போர் கண்ணோடு கண் காணும் நாளா பிப்ரவரி 14 வேதத்தை மீட்டெடுக்க வாஞ்சையோடு பசுவைக் கட்டியணைக்க பிப்ரவரி பதினாங்கா காமதேனு என கட்டிப் பிட...
2 கருத்துகள்:
புரட்டுகள் பலவிதம்...
திண்டுக்கல்லாரை வழிமொழிகின்றேன்
கருத்துரையிடுக