செவ்வாய், அக்டோபர் 4
காதல் - நிலையானதா?
பாப்புனைந்து
பம்மாத்து செய்கிறாய்
பார்க்காமல் போனேனென்று
பழிச் சுமத்துகிறாய்
எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்காதென்பதும்
இணையாதென்பதும்
இயற்கை நியதி
நிறைகளை ஒதுக்கி விட்டு
குறைகளைப் பட்டியலிட்டு
கறைப் படுத்தவில்லையென
கண்ணீர் வடிக்கிறாய்
புலவன்
பொய்யில் நெய்யொழுகுது
பாவையின் நெஞ்சம்
கல்லென்று கதைத்திடுது
முற்றுப் பெற்றதை
சற்றும் பொருந்தாதை
பாகம் இரண்டென
திரைக்கதை எழுதுது
நினைவுகள்
நீந்திதான் செல்லும்
கடந்துச் சென்றால்தான்
கரையேற முடியும்
வாழ நினைப்பவளுக்கு
வாடி நிற்க முடியுமோ
தடைகளைத் தகர்த்தால்தான்
தடங்களை விட்டுச் செல்லலாம்
பிரபஞ்ச வெளியில்
கானக வாழ்க்கை
அவைகளுக்கானது
நான் – அவள் - அதுவல்ல
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உன் பார்வையின் பொருள்
தொல் காப்பியத்தில் தேடத் தொடங்கினேன் இலக்கண விதிகள் – பார்வைக்குத் தட்டுப்படவில்லை சங்க இலக்கியத்திலும் சதுரகராதியிலும் சுழன்றுத் தேடினே...
-
பன்மொழி புலமை பக்தனுக்கு உண்டா ஏழேழு உலகை இரட்சித்து காக்கும் பரமனுக்கும் உண்டா அறிந்தது அறியாதது தெரிந்தது தெரியாதது ...
-
கலைஞர் காப்பீட்டு திட்டம் ரத்து, நான் மகிழ்ந்தேன், அரசு மருத்துவமனை இன்னும் இரண்டு திறந்து விடுவார்கள் என்று. ஆனால் நான்காண்டுகளுக்கு ஒருலட...
-
கடந்த 10 ஆண்டுகளில் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட 2800 நிறுவனங்கள் காணவில்லை. ஆயினும் புதியதாக 786 நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளில் பட்டி...
-
கயிறு மாட்ட நேரம் பார்த்து கழுத்தை நீட்டி என்ன கண்ட கழுதை யின்னு பேரு வாங்கி கண்ணீர் விட்டு தெருவில் நின்ன சம்பாதித்து கொடுத்து ச...
-
தொல் காப்பியத்தில் தேடத் தொடங்கினேன் இலக்கண விதிகள் – பார்வைக்குத் தட்டுப்படவில்லை சங்க இலக்கியத்திலும் சதுரகராதியிலும் சுழன்றுத் தேடினே...
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக