செவ்வாய், அக்டோபர் 4
காதல் - நிலையானதா?
பாப்புனைந்து
பம்மாத்து செய்கிறாய்
பார்க்காமல் போனேனென்று
பழிச் சுமத்துகிறாய்
எதிரெதிர் துருவங்கள்
ஈர்க்காதென்பதும்
இணையாதென்பதும்
இயற்கை நியதி
நிறைகளை ஒதுக்கி விட்டு
குறைகளைப் பட்டியலிட்டு
கறைப் படுத்தவில்லையென
கண்ணீர் வடிக்கிறாய்
புலவன்
பொய்யில் நெய்யொழுகுது
பாவையின் நெஞ்சம்
கல்லென்று கதைத்திடுது
முற்றுப் பெற்றதை
சற்றும் பொருந்தாதை
பாகம் இரண்டென
திரைக்கதை எழுதுது
நினைவுகள்
நீந்திதான் செல்லும்
கடந்துச் சென்றால்தான்
கரையேற முடியும்
வாழ நினைப்பவளுக்கு
வாடி நிற்க முடியுமோ
தடைகளைத் தகர்த்தால்தான்
தடங்களை விட்டுச் செல்லலாம்
பிரபஞ்ச வெளியில்
கானக வாழ்க்கை
அவைகளுக்கானது
நான் – அவள் - அதுவல்ல
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கண்களின் ஆற்றல்
குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...

-
வந்தேறிகளால் விரிந்தச் சென்னை வாழ வழியில்லையென நம்பிக்கையைக் குலைத்ததா பனியாக் குஜராத்திக்கும் “பவன் புரோக்கருக்...
-
உழைக்க தயாராக இல்லாதவன்தான் கூழைக் கும்பிடு போடுவான் இந்த படத்தை பார்த்தால் என்ன தெரிகிறது. தினமும் இதே காட்சிகள், கோட்டையிலும் கோமகள் இ...
-
அண்டமெல்லாம் அமைதி ஆனந்தம் ஐம்பூதங்களுக்கு ஆறறிவு அடைந்து கிடக்க அவை வாழத் தொடங்கின வரிகுதிரைகள் மான்கள் புனுகு பூனை - இன்னபிற வனவிலங்க...
-
குறள் 1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு நோய்நோக்கொன் றாய்நோய் மருந்து அஞ்சனம் தீட்டிய அவளின் கண்கள் கொஞ்சி அழைத்து குற்று யிராக்கி...
-
அன்றாடங் காய்ச்சியாய் அரைவயிற்றுக் கஞ்சிக்கு அவ்வீதிவழி – தள்ளுவண்டியில் காய்கறி விற்போம் அகிலஉலகப் பணக்காரன் அம்பானி அன்றாடங்காய்ச்சியா அ...
1 கருத்து:
அருமை
கருத்துரையிடுக