சனி, மே 18
கண்மூடும் வேளையிலே
கண்மூடும் வேளையிலே
கனவில் வந்தவளே
பண்பாடி அலைந்தோம்
பசுமைச் சூழ்வெளியில்
தண்நிலவு நீண்டிருக்க
தந்தநின் முத்தங்கள்
மண்ணுலகில் உன்னிடமே
மறுபடியும் வேண்டுகிறேன்
தண்டையிடும் சத்தம்
தளிர்நடை என்றானதே
சண்டையிடும் மனதும்
சங்கமத்தை வேண்டுதே
தொண்டுச் செய்ய
தோழமையை விரும்பும்
வண்டு பூவிடம்
வனைந்த பாவிது
கண்விழிக்க கலைந்தன
கண்மணி யாரென
அண்டை அயலகத்தில்
ஆர்வமாய் தேடிட
எண்ணிய வண்ணம்
எவரும் இல்லை
கண்ணூறுப் பட்டிருக்கும்
காத்திரு காதலிக்க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
யார் எவரோ?!
காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...
-
பன்மொழி புலமை பக்தனுக்கு உண்டா ஏழேழு உலகை இரட்சித்து காக்கும் பரமனுக்கும் உண்டா அறிந்தது அறியாதது தெரிந்தது தெரியாதது ...
-
தாயென்றாய் தாரமென்றாய் தெய்வமென்றாய் பெண்ணை தாரம் தாயாக தின்ன வைத்தாய் மண்ணை கரு உருவாக காதல் வேண்டும் அல்ல சோதனைக்குழாய் ...
-
நியூட்டனின் 3வது விதிப்படி எனை ஈர்க்கும் எதிர்வினையே திக்குத் தெரியாத பரந்த வெளியில் திசைதனை காட்டுவது கன்னி உன் கண்களே காந்த ஊசிபோல் ...
-
புரட்சித் தலைவர் புரட்சித் தலைவி ஆம் உங்களுக்கு புரட்சி தெரியும் வச்சாத்தியும் மகாமக குளமும் பரமக்குடியும் நேற்றின்றைய புரட்சிகள் லிபியாவ...
-
கண் கலந்து காதலில் விழுந்து கரம் பிடித்தேன் ஒன்னு கலந்து ஒரு பிள்ளையும் பெத்து ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன் வார்த்தெடுத்த வார்த்தைகளின...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக