ஞாயிறு, டிசம்பர் 7

திரளழகு











திரளழகை தீபவொளி
திருத்தி எழுதிட
முரணேது முந்தானை
முகமன் கூறிட
மரகதவுடல் மச்சானை
மகிழ்ச்சியில் ஆழ்திட
சரசங்கள் பயின்றிட
சரணடை பேரழகே

நின்னசைவின் எழிலில்
நிலவும் நாணுதடி
பின்னலிடை, பின்னழகு
பிதற்ற விட்டதடி
என்னுறக்கம் கெடுத்தே
ஏகாந்தம் கொல்லுதடி
மன்னவனின் மடிசாய்திட
மாயங்கள் நிகழுமடி

இழுத்துப் பிடித்து
இமயமலை யாக்கினாலும்
தழுவும் தென்றலின்றி
தேகம் சிலிர்காதடி
கொழுநன் குதுகலிக்க
கொடுத்தால் சுகங்களடி
செழுமையான காதல்
சேர்ந்திருக்கும் வாழ்வுதானடி


அ. வேல்முருகன்


 

கருத்துகள் இல்லை:

தேர்தல் வந்து தீர்ந்ததென்ன?

  தேனாறும் பாலாறும் தேர்தல் வந்தா ஓடுமா ஏனோ தானோ என்றிருந்தா ஏய்திடும் கூட்டமா தானமா தந்ததற்கு தருவது உனதுபொன் ஓட்டா மான மில்லா மாறும் கட்சி...