ரோம் நகரம்
பற்றி எரிகையில்
நீரோ மன்னன்
"ஃபிடில்" வாசித்தது வரலாறு
ஈரானோடு
இஸ்ரேலும் பற்றி எரிய
அமெரிக்க அதிபரால்
இரத்த ஆறு ஓடுகிறது
மலைகளுக்கிடையே
பேரொளித் தோன்றி
பத்துக் கட்டளைகளை
நெதன்யாகுவுக்குச் சொல்லுமோ
இறை தூதர்கள்
எங்கேயாவது தோன்றி
இந்தப் போரை
இருநாட்களுக்குள் முடிப்பார்களோ
பேரரசுகள் வீழ்ந்து
வல்லரசுகள் உருவாகிட
நாகரிகத் தொட்டில்கள்
நாசமாகிதான் போயின
மேலாதிக்க பேராசையில்
மேலும் சிலநாடுகள்
மேன்மை பொருந்திய
மகுடத்திற்கு காத்திருக்கின்றன
மாடமாளிகைகள்
மணல்மேடுகளாக
மானுட மரணங்கள்
மனதை மாற்றவில்லை
குகைகளில் வாழ்ந்து
குடும்பம் கூட்டமென
கோலோச்சியவர்கள்
பதுங்கு குழிகளில்
நாலுகால் பாய்ச்சலில்
நங்கூரமின்றி அறிவியல்
நாடற்ற நாடோடிகளாய்
நாகரிகச் சமூகம்
மானுட மரணத்தை
மருந்துகாளல் நீட்டித்தவர்கள்
போரிடும் காரணத்தை
பொய்யாய்தான் உரைத்தனர்
இது, சுதந்திரத்திற்கான
விடுதலைப் போரா
சுரண்டுவதற்கான
மேலாதிக்கப் போர்
வெல்வது யாராக இருந்தாலும்
வீழ்வது மக்களே
கொல்வது கொற்றவனென்பதால்
கொலைபழி சுமத்து
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக