திங்கள், மார்ச் 21

முத்துப் பல்லழகி

முத்துப் பல்லழகி
மோகனச் சொல்லழகி
சித்தம் கலங்குதடி
சிரித்திடும் அழகிலடி

நித்தம் யோசனையடி
நீயெனக்கு சொந்தமென
தத்தம் செய்வாயோ
தடையென உரைப்பாயோ

ஆசை அடங்கலடி
ஆதலினால் வேணுமடி
மீசை துடிக்குதடி
மிச்சமும் உள்ளதடி

ஆவணம் செய்வாயென
ஆவலாய் இருக்கிறேனடி
தவணைத் தரலாமென
தள்ளிப் போடாதடி


அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

யார் எவரோ?!

  காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...