திங்கள், மார்ச் 21

முத்துப் பல்லழகி

முத்துப் பல்லழகி
மோகனச் சொல்லழகி
சித்தம் கலங்குதடி
சிரித்திடும் அழகிலடி

நித்தம் யோசனையடி
நீயெனக்கு சொந்தமென
தத்தம் செய்வாயோ
தடையென உரைப்பாயோ

ஆசை அடங்கலடி
ஆதலினால் வேணுமடி
மீசை துடிக்குதடி
மிச்சமும் உள்ளதடி

ஆவணம் செய்வாயென
ஆவலாய் இருக்கிறேனடி
தவணைத் தரலாமென
தள்ளிப் போடாதடி


அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

H₂O என்றால்...?

கடவுள்— நம்பிக்கையா ? அனுபவிக்கும் அனுபவமா ? கண்மூடி காலங்காலமாய் சொன்னதை கேள்வி கேட்காமல் ஏற்பதா ? நேரடி அனுபவமோ , நிலைத்திருக்கும் ...