திங்கள், மார்ச் 21

முத்துப் பல்லழகி

முத்துப் பல்லழகி
மோகனச் சொல்லழகி
சித்தம் கலங்குதடி
சிரித்திடும் அழகிலடி

நித்தம் யோசனையடி
நீயெனக்கு சொந்தமென
தத்தம் செய்வாயோ
தடையென உரைப்பாயோ

ஆசை அடங்கலடி
ஆதலினால் வேணுமடி
மீசை துடிக்குதடி
மிச்சமும் உள்ளதடி

ஆவணம் செய்வாயென
ஆவலாய் இருக்கிறேனடி
தவணைத் தரலாமென
தள்ளிப் போடாதடி


அ. வேல்முருகன்

கருத்துகள் இல்லை:

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...