திங்கள், ஏப்ரல் 11

உரிமையோ உரிமை

ஏப்ரல் 13 உனது உரிமையை பதிவு செய்யும் நாள் இப்படி ஒருவர் சொல்லிக் கொண்டிருந்தார்.

எது உரிமை என்றேன்.  வாக்களிப்பது
அதுமட்டுமா? அதற்கப்புறம்

பெத்துக்கறது மட்டும் உரிமையென்று பிள்ளையை விட்டு விட்டு செல்வாயா அல்லது நல்லது கெட்டது சொல்லி வளர்ப்பாயா? தவறு எனில் அடித்து திருத்துவாயா அல்ல

பெத்ததோடு உரிமை முடிந்ததென்று விட்டு விடுவாயா என்றேன்

ஓட்டு போடுவது உரிமை என்றால் தவறு செய்தவனை தட்டிக் கேட்க உரிமையில்லை.  தவறு செய்தவனை திரும்ப அழைக்க உரிமையில்லை, அவனுக்கு பதில் புதியவனை தேர்ந்தெடுக்க உரிமையில்லை. இந்த உரிமையெல்லாம் எப்போ கிடைக்குமோ அப்போ

ஓட்டு போடுவோம்

அதுவரை
அந்த உரிமை பெற போராடுவோம்

கருத்துகள் இல்லை:

நளினம்

  கற்றைக் கூந்தலில் பூச்சூடி கட்டுடலில் ஆடைச் சூடி சிற்றிடை தன்னில் சிறையிட்டு சிந்தனையைச் செயலிழக்கச் செய்தே பற்றற்று வாழ்ந்த பாமரனை பரி...