வியாழன், ஏப்ரல் 28

அடிப்படை உரிமை

6 லிருந்து 14 வயது உட்பட்ட குழந்தைகள் கல்வி பெறுவது அடிப்படை உரிமை என்று அரசியல் சாசனம் சொல்கிறது.  அதற்கான சட்டம் இயற்றி ஒர் ஆண்டு முடிந்தும் விட்டது.  தனியார் பள்ளிகள் 25% குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.

கொள்ளை அடிப்பவன் கூறுகிறான் அப்போ எனக்கு இன்னொரு வேளை பள்ளியை இயக்க அனுமதி கொடு.  அப்போதும் என்மீது எதையும் திணிக்க கூடாது என்கிறான்.

இலவசம் என்பது அரசியல் கட்சியின் வாக்குறுதி.  அதை அவர்களே நிறைவேற்றுவதில்லை.  தனியார் பள்ளி முதலாளிகள் கேட்பார்களா.  அரசு ஏன் இவர்களுக்கு ஏன் பள்ளி நடத்த அனுமதி கொடுத்தது.

இட நெருக்கடி மிக்க பள்ளிகள்.  அடைத்துக் கொண்டு வரும் பள்ளி வாகனங்கள், ஆய்வுகூடமில்லா பள்ளிகள், விளையாட்டு வசதிகள் துளியும்  இல்லா பள்ளி இயங்கி கொண்டுதானிருக்கின்றன.

படிப்பு கட்டணம் ஆண்டுக்கு ரூ.15000 முதல் ரூ.100,000 வரை வசூலிக்கின்றனர். ஆண்டு துவக்கத்தில் தனிக் கட்டணம் என தனி வசூல்.  மக்கள் கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றனர்.  ஆம் ஒவ்வொரு பெற்றோரும் தன்னை விட சிறந்த கல்வி தன் சந்ததி பெற வேண்டும் என்றுதானிருக்கின்றனர்.

அரசுக்கு வரி வாங்குவது மட்டும்தான் தன் வேலை.  சட்டம் இயற்றுவ்து தானும் ஏதோ செய்து விட்டோம் என கணக்கு காட்ட தானே தவிர அமுல் படுத்த அல்ல.

எல்லோரும் படித்து விட்டால்................

தன் வீட்டில் தான் சாப்பிட்ட தட்டு கழுவ ஆள் வைத்திருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் இன்னும் சிலர் புட்டபர்தியில் எச்சில் தட்டு கழுவி சேவை செய்வார்கள்.  கற்ற கல்வி அப்படி சிந்திக்க வைக்கிறது

சரி இதை விடுங்கள்

எல்லோரும் படித்து விட்டால்................

கொடி பிடிக்க, கள்ள ஓட்டு போட, காசு வாங்கி ஓட்ட போட , அடிதடி வேலை செய்ய ஆள் இல்லாமல் போய் விடும்

அப்புறம் எல்லோருக்கும் வேலை கொடுக்கனும்

அய்யோ அது இன்னொரு அடிப்படை உரிமை

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...