கல்நெஞ்சென
உரைத்திட,
கண்ணீர்
வடித்தாய்;
சொல்லொண்ணா
வலிகளை
சொற்களில்
பதித்தாய்.
அல்லலில்
உழலுவதை
அடிமனதில்
இரசித்தாய்;
இல்லாளன்
என்றாலும்
இறைஞ்சிட
வைத்தாய்.
என்னவள்
என்பதனால்
எதையும்
சகித்தேன்;
அன்னியமாய்
அளவளாவ
ஆழ்மனதில்
அழுதேன்.
என்னாங்கு
எதுகுறை
எந்நாளும்
அறியேன்;
உன்னத
அன்பிற்கு
உடனுறைதல்
என்பேன்.
சன்னிதியில்
ஊழியம்
சந்ததம்
செய்தாலும்,
என்
விதி என்னவோ—
ஏகாந்தம்
என்றாச்சு.
நன்னாள்
என்றாலோ,
நாளெதற்கு
வருகுதென
தன்மானம்
கேட்டாலும்
தற்காக்குது
நம்பிக்கை
வலிமறைத்து
வாழ்ந்திட
வலிமை
கொண்டேன்;
சலிப்பே
வந்தாலும்
சமாதானமாகிறேன்.
பொலிவிழந்த
போதிலும்
புலம்பிடாது
இருந்து,
கெலித்தே
காட்டுகிறேன்;
கெத்தாக
உலவுகிறேன்.
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக