செவ்வாய், மே 26

கல்நெஞ்சுக்காரி

 




கல்நெஞ்சென உரைத்திட,
கண்ணீர் வடித்தாய்;
சொல்லொண்ணா வலிகளை
சொற்களில் பதித்தாய்.

அல்லலில் உழலுவதை
அடிமனதில் இரசித்தாய்;
இல்லாளன் என்றாலும்
இறைஞ்சிட வைத்தாய்.

என்னவள் என்பதனால்
எதையும் சகித்தேன்;
அன்னியமாய் அளவளாவ
ஆழ்மனதில் அழுதேன்.

என்னாங்கு எதுகுறை
எந்நாளும் அறியேன்;
உன்னத அன்பிற்கு
உடனுறைதல் என்பேன்.

சன்னிதியில் ஊழியம்
சந்ததம் செய்தாலும்,
என் விதி என்னவோ—
ஏகாந்தம் என்றாச்சு.

நன்னாள் என்றாலோ,
நாளெதற்கு வருகுதென
தன்மானம் கேட்டாலும்
தற்காக்குது நம்பிக்கை

வலிமறைத்து வாழ்ந்திட
வலிமை கொண்டேன்;
சலிப்பே வந்தாலும்
சமாதானமாகிறேன்.

பொலிவிழந்த போதிலும்
புலம்பிடாது இருந்து,
கெலித்தே காட்டுகிறேன்;
கெத்தாக உலவுகிறேன்.



. வேல்முருகன்




கருத்துகள் இல்லை:

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...