காலாற நடந்து
கைக்கோர்த்து சென்றது
காட்சிப் படிமமாய்
கலங்கச் செய்திட,
மறக்க
முயற்சித்து
மனமது
இயங்காமல்,
மாயங்கள்
நிகழாமல்
மறத்தே
போனது.
காயங்கள்
ஆறிட
நினைவுகள்
அகன்றிடனும்;
நிழலாய்
ஏன் இன்னும்
நிம்மதியைக்
கெடுக்கிறாய்?
வலிகள்
வடுவாக,
வடிகால்
இல்லாமல்,
வழி
மீள யோசிக்கையில்
வதைப்படலம்
நீட்டிக்கிறாய்.
எதிரெதிர்
வந்தாலும்
யார்
எவரோ என்றே,
எதுவும்
நிகழாததுபோல்
எங்ஙனம்
நகர்கிறாய்?
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக