திங்கள், மே 11

யார் எவரோ?!

 










காலாற நடந்து
கைக்கோர்த்து சென்றது
காட்சிப் படிமமாய்
கலங்கச் செய்திட,

மறக்க முயற்சித்து
மனமது இயங்காமல்,
மாயங்கள் நிகழாமல்
மறத்தே போனது.

காயங்கள் ஆறிட
நினைவுகள் அகன்றிடனும்;
நிழலாய் ஏன் இன்னும்
நிம்மதியைக் கெடுக்கிறாய்?

வலிகள் வடுவாக,
வடிகால் இல்லாமல்,
வழி மீள யோசிக்கையில்
வதைப்படலம் நீட்டிக்கிறாய்.

எதிரெதிர் வந்தாலும்
யார் எவரோ என்றே,
எதுவும் நிகழாததுபோல்
எங்ஙனம் நகர்கிறாய்?

அ. வேல்முருகன்


கருத்துகள் இல்லை:

கல்நெஞ்சுக்காரி

  கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...