வேலையற்றவர்கள்
வீதிக்கு வாராது,
“விதியே” என்று
விடியலுக்கு தவமிருக்க,
அதிகாரத்தைச் சுவைத்த
ஒட்டுண்ணிகள்
அதிகாரமற்றவர்களுக்கு
அளித்த பெயர்.
ஆண்டு கணக்காக
அநீதியாய் வாய்தா;
மீண்டதோ நியாயம்—
மக்களின் சோம்பலால்.
சமூக வலைதளங்களில்
சந்தி சிரித்தாலும்,
ஊழல் மயமானவர்கள்
ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.
ஊடகமெல்லாம்
ஊனத்தால் சார்ந்திருக்க,
ஊமையான மக்கள்
ஊர்வலம் வந்திட,
கரப்பான் பூச்சிகள்
கரையானாய் பரவ,
கலங்கியது நீதியா?
கார்ப்பரேட் அரசா?
“விதியே” என்று
விடியலுக்கு தவமிருக்க,
ஒட்டுண்ணிகள்
அதிகாரமற்றவர்களுக்கு
அளித்த பெயர்.
ஆண்டு கணக்காக
அநீதியாய் வாய்தா;
மீண்டதோ நியாயம்—
மக்களின் சோம்பலால்.
சமூக வலைதளங்களில்
சந்தி சிரித்தாலும்,
ஊழல் மயமானவர்கள்
ஒருபோதும் வெட்கப்படுவதில்லை.
ஊடகமெல்லாம்
ஊனத்தால் சார்ந்திருக்க,
ஊமையான மக்கள்
ஊர்வலம் வந்திட,
கரப்பான் பூச்சிகள்
கரையானாய் பரவ,
கலங்கியது நீதியா?
கார்ப்பரேட் அரசா?
அ. வேல்முருகன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக