செவ்வாய், டிசம்பர் 25

நாளொன்றுக்கு ஐந்தரைக் கோடி


முகநூல், இணையத்தை பயன்படுத்தும் அனைவருக்கும் அங்கொரு விலாசம் உண்டு.  இலவசமாக கிடைக்கிறதா இந்த சேவை. இல்லை

உங்கள் தகவல்களை காசாகிக் கொண்டு  கொழிக்கிறது.  ஆனால் அது போதவில்லை என்று அதன் முதலீட்டாளர்கள்  இந்நிறுவனத்தை மேலும் அழுத்தம் கொடுக்கிறது

நாளொன்றுக்கு ஐந்தரைக் கோடி வருமானம் ஈட்டுகிறது இந்த தளம்.  கடந்த ஆண்டு ஒரு முகநூல் பயனாளர்  மூலம் ரூ.65.46 கிட்டியது என்றால் இந்த ஆண்டு ரூ.68.76 என்று இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த வருமானம் கூட வேண்டும் என்பது முதலீட்டாளர்களின் விருப்பம்.  அதற்காக முகநூல் நடத்துபவர்கள் உங்கள் தகவல்களை விற்க முன்வந்து விட்டார்கள்.

ஆம். ரூ.55 கொடுத்தால் நீங்கள் தனிப்பட்டது என்று வைத்திருக்கும் தகவல் முதல், உங்கள் தொடர்பு தகவல் வரை கொடுக்க தயாராகி விட்டது.

அடுத்து உங்கள் தகவல் பலகையில் மிக அதிகமான விளம்பரங்கள் வந்து விழப் போகிறது.  நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்கள் முகநூல் பக்கத்தை பயன் படுத்துகிறீர்களோ அவ்வளவு அதிகமான வருமானம் முகநூல் நிறுவனத்திற்கு.

அதுமட்டுமல்ல,  சில இணையதளங்கள் மற்றும் மென்பொருள்கள் தானகவே முகநூலிலிருந்து தங்கள் தகவல்களை திரட்டி கொள்ளப் போகிறது.  அதற்கு காசு முகநூல் நிறுவனம் பெற்றுக் கொள்ளும்.

ஆக யோசித்து செயல்படுங்கள். தனிப்பட்ட தகவல்களை தவிருங்கள்.


1 கருத்து:

Unknown சொன்னது…

பயனுள்ன தகவல். பகிர்விற்கு நன்றி.

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...