செவ்வாய், ஏப்ரல் 28

கருப்பு சிவப்பு


கருப்புதான் எனக்கு பிடிச்ச "கலரு"
கானா காண்பவனின் போதை பாடலு
இருப்பு இந்தியாவா அமெரிக்காவா சொல்லு
இனபேதம் இல்லையென வாயை மெல்லு

பள்ளுபறை சக்கிலி பஞ்சாயத்து தலைவனா?!
பாராண்ட பரம்பரை பணிவா இருக்கணுமா?
கருப்பின பெண்மணி நகரசபை தலைவரா?
சிவப்பினம் சேவகம் செய்ய தயாரா!

"டியூஸ் பைர்ட்" கருப்பின பெண்மணி
மிசௌரியின் பர்ம நகர தலைவராகிறார்
அசௌகரியமென பதவியேற்பு  உறுதிமொழி சொல்பவர்
அரசின் பதவியிலிருந்து விலகுகிறார்

ஒருவர் இருவரல்ல அனைத்து சிவப்பினமும்
ஓற்றுமையாய் பதவி விலகி சென்றனர்
திருமண வீட்டில் சீப்பை ஓளித்துவிட்டார்கள்
மணவிழா உண்டா இல்லையா? மக்களே!

இனப் பிரச்சினையோ? சிறுபான்மையின அதிகாரமோ?
"அதற்கும் மேலே" பாதுகாப்பின்மைதான் காரணம்!!!
அரசு செயல்படும் ரகசியம் அறியாதோர்
முரசு கொட்டும் இச்செயலை மூடியே வைப்பர்

மேல்தட்டென்பது -  நிறமா, பணமா, அதிகாரமா
தாழ்த்தப்பட்ட தலைமைக்கு இதுவும் காரணமா
மிசௌரியும் மதுரையும் பாரினில் ஒன்றானதா - ஆம்
அமெரிக்கா வல்லரசு இந்தியாவும் வல்லரசு


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனபேதம் என்றும் வேண்டாம்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

இனபேதம் வேண்டவே வேண்டாம்
தேவை
மனிதம்

தருமி சொன்னது…

ஒருவர் இருவரல்ல அனைத்து சிவப்பினமும்
ஓற்றுமையாய் பதவி விலகி சென்றனர்


நடந்ததா? செய்தி தெரியாதே....

மேல்பாதி திரௌபதி

ஆறுகால ஆராதனையின்றி அம்மன் அவதியுறுவதாய் ஆங்கொரு புலம்பல் அரவமில்லாது ஆலயத்தை திறந்து ஆராதனை முடிந்தவுடன் மூடிடவும் பக்த கோடிகள் பக்கம் வந்த...