வெள்ளி, ஏப்ரல் 16

வித்தகனே! மன்னவனே!






அருகில் நீயிருக்க
அத்தனையும் மறந்திடுமே
அஞ்சுகமே உனையணைக்க
ஆனந்தம் பெருகிடுமே


சிந்தையில் ஏதுமில்லை
சித்தார்தன் நிலையுமில்லை
சுந்தரப் பாண்டியனாய்
சந்தேகம் ஒன்றுமில்லை

கொத்துமலர் கொடுத்தவனே – நின்
சித்து விளையாட்டை நானறிவேன்
கற்றலில் நீயொரு வித்தகனே
முற்றுமோ என்காதல் மன்னவனே?!


மேகமே...... மேகமே.......

  அலைந்து திரியும் உனை அகவை நிறைந்தவளுக்கு அணியும் பாவாடையாக்கவா ? மலை முகட்டை மறைத்துச் செல்கிறாயே— மாராப்பு ஞாபகமா ? சுட்டெரிக்கும்...