ஞாயிறு, ஏப்ரல் 25

திடீர் செல்வம்

 


குறள் 837

 

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை.

 


ஆய்ந்தறியும் திறனில்லா
     அறிவிலியின் செல்வத்தை
வாய்ப்புக் கிடைப்போர்
     வாரிவாரிச் செல்வர்
ஏய்ப்பது அறியா
     ஏமாறும் பேதையர்
தேய்ந்துக் கிடக்கும்
     தோழமைக்கு உதவார்


பெருஞ்செல்வம் படைக்கும்
    பாதையை அறியாதவன்
திருவருளால் கிடைத்ததை
    தீயவர் புசித்திருக்க
வெற்று மனிதனாய்
    வேடிக்கைப் பார்ப்பான்
சுற்றமோ வாடிடும்
    சூழ்நிலையில் வருந்திடும்

கருத்துகள் இல்லை:

தேர்தல் 2024

நாட்டின் வளங்களை நாலு பேருக்கு விற்க நாடி வருகிறார்கள் நாள் 19 ஏப்ரல் 2024 பத்தல பத்தல பத்தாண்டுகள் என்றே பகற்கனவோடு வருபவனை பாராள அனுமதிப்...