திங்கள், ஏப்ரல் 26
மயிலக்காள மச்சானே
கூரை வேய்ந்த
குச்சி வீட்டிற்கு
யாரைத் தேடி
யாத்திரை வந்த
கூரைச் சீலை
கொண்டு வந்தவனே
காரை வீடிருந்தா
கைப்பிடித்து வாரேன்
அஞ்சாறு நாளா
அத்தானை மறந்தவளே
பஞ்சாரத்தில் கோழியும்
படுத்து றங்குது
சஞ்சாரம் ஏதுமில்லை
சடுதியில் வந்தே
நெஞ்சோரம் சாயடி
நிலவும் காயுதடி
மயிலக்காள மச்சானே
மனசிருக்குச் சேரத்தான்
தையில நாள்குறிச்சா
தையலுக்கு ஆனந்தமே
ஆயினும் கனவுகள்
அத்தனையும் கூறத்தான்
ஞேயத் தலைவனே
ஞாபகம் கொள்வாயா
வாழும் வாழ்க்கையில்
வசந்தத்தை நோக்குவோம்
பாழும் சூறாவளியை
பக்குவமாய் கையாள்வோம்
பொழுது நமக்கானது
புறப்படு தோழியே
விழுது பரப்புவோம்
விசால உலகிலே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கல்நெஞ்சுக்காரி
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
காலாற நடந்து கைக்கோர்த்து சென்றது காட்சிப் படிமமாய் கலங்கச் செய்திட, மறக்க முயற்சித்து மனமது இயங்காமல் , மாயங்கள் நிகழாமல் மறத்தே போன...
-
எனக்கு மாற்றென யாரைத் தேடுகிறாய் ? வனப்பு குறைவென்றா வடிகட்டப் பார்க்கிறாய் ? முன்பின் பழகாமல் முந்தானையில் முடிச்சிட்டால் , முதல் நா...
-
கல்நெஞ்சென உரைத்திட , கண்ணீர் வடித்தாய் ; சொல்லொண்ணா வலிகளை சொற்களில் பதித்தாய் . அல்லலில் உழலுவதை அடிமனதில் இரசித்தாய் ; இல்லா...
-
15 வயது முஸ்லீம் பெண் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்து கொண்டார். உயர் நீதி மன்றம் சொல்கிறது இந்து பெண் 18வயதுக்கு குறைவாக திருமணம் செய்த...
-
வேலையற்றவர்கள் வீதிக்கு வாராது, “விதியே” என்று விடியலுக்கு தவமிருக்க, அதிகாரத்தைச் சுவைத்த ஒட்டுண்ணிகள் அதிகாரமற்றவர்களுக்கு அளித்த ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக