திங்கள், ஏப்ரல் 26
மயிலக்காள மச்சானே
கூரை வேய்ந்த
குச்சி வீட்டிற்கு
யாரைத் தேடி
யாத்திரை வந்த
கூரைச் சீலை
கொண்டு வந்தவனே
காரை வீடிருந்தா
கைப்பிடித்து வாரேன்
அஞ்சாறு நாளா
அத்தானை மறந்தவளே
பஞ்சாரத்தில் கோழியும்
படுத்து றங்குது
சஞ்சாரம் ஏதுமில்லை
சடுதியில் வந்தே
நெஞ்சோரம் சாயடி
நிலவும் காயுதடி
மயிலக்காள மச்சானே
மனசிருக்குச் சேரத்தான்
தையில நாள்குறிச்சா
தையலுக்கு ஆனந்தமே
ஆயினும் கனவுகள்
அத்தனையும் கூறத்தான்
ஞேயத் தலைவனே
ஞாபகம் கொள்வாயா
வாழும் வாழ்க்கையில்
வசந்தத்தை நோக்குவோம்
பாழும் சூறாவளியை
பக்குவமாய் கையாள்வோம்
பொழுது நமக்கானது
புறப்படு தோழியே
விழுது பரப்புவோம்
விசால உலகிலே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மெய்யும் அறிவும்
உடலது அறிவை உள்ளபடி ஏற்காது உடன்படுவ தில்லையென உறுதியான முடிவுகள் தடாபொடா சட்டங்கள் தடாலென மாறிடும் அடடா அற்புதமென அனுமதி அளித்திடும் தேகத...
-
அறியாததை அறியவும் ஆதியைத் தேடி ஓடவும் அறிந்ததை அகிலத்தில் ஆலம் விழுதாய்ப் பரப்பவும் அறம்தனை வகுத்து ஆறறிவு உயிராய் உயரவும...
-
சிறந்த பதிலை செப்புவதா வேண்டாமா சிக்கலாகுமோ என சிந்தித்துக் கொண்டிருக்க தாமதமேன் தலைவா தசைசால் மானுடா தக்கதொரு பதிலுக்கா தவிப்பதேன் மண...
-
கற்பின் இலக்கணம் கண்ணகி யெனில் காதற் கிழத்தி காப்பிய மாதவி?!! அரங்கேற்றம் கோவலன் அவர்கள்மகள் மணிமேகலை அத்துடன் துறவறம் அக்மார்க் இல்லையோ ...
-
நீ என்னை சந்திக்கும் போதெல்லாம் இறகுகள் முளைத்து பறக்கிறேன் உன்னருகாமையில் - நான் உயிரோடிருப்பதை உணர்கிறேன் என்றென்றும் எனதானவன் நீ எனது ப...
-
முழுநிலவு காயுதடா முகங்காட்டிப் போயேன்டா எழுமாசை கோடிகளடா என்னவென்று கேளடா எழுபிறப்பும் என்னுடன் எழுந்தருள வேண்டுமடா மழுப்பாமல் மாலையிட மன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக