திங்கள், ஏப்ரல் 26

மயிலக்காள மச்சானே





கூரை வேய்ந்த
   குச்சி வீட்டிற்கு
யாரைத் தேடி
    யாத்திரை வந்த
கூரைச் சீலை
    கொண்டு வந்தவனே
காரை வீடிருந்தா
    கைப்பிடித்து வாரேன்


அஞ்சாறு நாளா
    அத்தானை மறந்தவளே
பஞ்சாரத்தில் கோழியும்
    படுத்து றங்குது
சஞ்சாரம் ஏதுமில்லை
    சடுதியில் வந்தே
நெஞ்சோரம் சாயடி
     நிலவும் காயுதடி


மயிலக்காள மச்சானே
    மனசிருக்குச் சேரத்தான்
தையில நாள்குறிச்சா
    தையலுக்கு ஆனந்தமே
ஆயினும் கனவுகள்
   அத்தனையும் கூறத்தான்
ஞேயத் தலைவனே
    ஞாபகம் கொள்வாயா


வாழும் வாழ்க்கையில்
    வசந்தத்தை நோக்குவோம்
பாழும் சூறாவளியை
    பக்குவமாய் கையாள்வோம்
பொழுது நமக்கானது
    புறப்படு தோழியே
விழுது பரப்புவோம்
    விசால உலகிலே


கருத்துகள் இல்லை:

மெய்யும் அறிவும்

  உடலது அறிவை உள்ளபடி ஏற்காது உடன்படுவ தில்லையென உறுதியான முடிவுகள் தடாபொடா சட்டங்கள் தடாலென மாறிடும் அடடா அற்புதமென அனுமதி அளித்திடும் தேகத...