திங்கள், ஏப்ரல் 26
மயிலக்காள மச்சானே
கூரை வேய்ந்த
குச்சி வீட்டிற்கு
யாரைத் தேடி
யாத்திரை வந்த
கூரைச் சீலை
கொண்டு வந்தவனே
காரை வீடிருந்தா
கைப்பிடித்து வாரேன்
அஞ்சாறு நாளா
அத்தானை மறந்தவளே
பஞ்சாரத்தில் கோழியும்
படுத்து றங்குது
சஞ்சாரம் ஏதுமில்லை
சடுதியில் வந்தே
நெஞ்சோரம் சாயடி
நிலவும் காயுதடி
மயிலக்காள மச்சானே
மனசிருக்குச் சேரத்தான்
தையில நாள்குறிச்சா
தையலுக்கு ஆனந்தமே
ஆயினும் கனவுகள்
அத்தனையும் கூறத்தான்
ஞேயத் தலைவனே
ஞாபகம் கொள்வாயா
வாழும் வாழ்க்கையில்
வசந்தத்தை நோக்குவோம்
பாழும் சூறாவளியை
பக்குவமாய் கையாள்வோம்
பொழுது நமக்கானது
புறப்படு தோழியே
விழுது பரப்புவோம்
விசால உலகிலே
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சாதி
கண் கலந்து காதலில் விழுந்து கரம் பிடித்தேன் ஒன்னு கலந்து ஒரு பிள்ளையும் பெத்து ஒத்திசைந்து வாழ்ந்திருந்தேன் வார்த்தெடுத்த வார்த்தைகளின...
-
அமெரிக்காவின் paypal நிறுவனம் பழைய மகாபலிபுரம் சாலையில் இயங்கி வருகிறது. நிறுவனத்தின் ஆண்டு விழா போட்டிகளின் ஒரு பகுதியாக பணியாளர்களை இப்பட...
-
ஜனநாயகத் திருவிழா ஜனநாயகன் திரைப்படம் சதிகளால் வரவில்லை என சந்துக்கு சந்துப் பேசிக் கொள்கிறார்கள் வேட்பாளர் பட்டியல் வெளியிட முடியாத க...
-
எலியும் பூனையும் இன்ன பிற “ஜந்துக்கள்” வசிக்க எளிதாய் இருப்பிடம் கண்டு பிடித்துவிடுகிறது நான்கு சுவர்களுக்குள் ...
-
காதலன் என்னிடம் கொண்டாயோ கரிசனம் ஆதலின் எமக்கு அளித்தாயோ தரிசனம் பார்வை தீண்டிட பெற்றேன் விமோசனம் தீர்வை கண்டிட தாராயோ அரியாசனம்
-
அச்சடிக்கும் இயந்திரத்தை அரசாங்கம் வைத்துக் கொண்டு அது ஏன்? வரிக்கு மேல வரிகளை போடுகிறது உழைத்துக் கிடைக்கும் ஊதியத்திற்கு உன்னிடம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக